வலிகள் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
---உன் மௌனமே..
பாசம் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
--நீ அருகில் இருக்கையில் அது எதற்கு..
ஸ்பரிசம் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
--உன் நெருக்கம் ...
கோபம் வருமா என்றாய்
--நமக்குள் இருக்கும் அந்த சிறு இடைவெளியின் மீது மட்டும்..
பிடித்த இடம் என்றால்
--உன் இதயம்..
பிடித்த ஓவியன் என்றால்
--உன்னை வரைந்த கடவுள் தான்..
.
.
.
.
இத்தனையும் கேட்கிறாயே முதலில் சொல்
என்னை உனக்கு பிடிக்குமா ??
2 comments:
very nice lines by Praveena
thank u !
Post a Comment