மூடு பனி பொழிய
முழு நிலவொன்று
இன்று பூமியில் வந்ததோ ?
முகம் காண மறுக்கிறாயே
அம்மாவசையானது என் மனம்
அரைகுறையாய் உன் முகம்...
பார்த்ததும் பதிந்து விட்டதே ?
என் நெஞ்சில் உந்தன் முகம்
நானும் கூட ஓவியனோ ??
ரவிவர்மாவைபோல் ??
வரைந்தேரிவிட்டது எனதோவியம்
எனக்கு தெரிந்த தேவைதை
என்றால் அது நீதானடி..
தேவதையாய் உன்னை பார்த்தும்
கெஞ்சுகிறது என் இதயம்
உயிர் கொடுத்திட வேண்டி...
மனிதனால் முடியாதது ஏதுமில்லையென
முழுதாய் நம்பிவந்தேன் நான்.
முதல் முறை தவறிப்போனேன்.
ஓவியத்திற்கு உயிர் கொடுத்திட
காதல் வேண்டுமாம் - காதலுக்கு
நீ வேண்டுமடி அன்பே...
நித்தமும் காத்திருக்கிறேன்
காதல் வரம் வேண்டி...
காதல் தேவதையே உனக்காய்...
0 comments:
Post a Comment