என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!




உன் வீடு முழுக்க 
விளக்கேற்றிவிட்டாய்..
என் வாசலும் உனக்காக தான் 
காத்துக்கிடக்கிறது !!




உன்னை காதலிக்கையில்
உன் கவனத்தை ஈர்க்க செய்த
குரும்புகள் தான்..
இன்று என் கவனத்தையே
இழக்க செய்கிறது !!

பயம்.



இரவென்றால்
உனக்கு இருட்டு பயம்..
எனக்கு பயமே
உன்னினைவு
வருமென்று தான் !!

நினைவு பயங்களுக்கு பெயர்
நீமோபோபியாவாம்..
நீ இல்லாமல் போனால்
என்னவென்று யாரும்
சொல்லவில்லையே



ரோஜாவே அழகு தான்
அதற்க்கெதற்க்கு மல்லிகையால்
அலங்காரமெல்லாம் ?

அன்பை கடன் கொடுக்க முடியுமா ?

சொல்ல முடியாதென்றாலும்
நீ கொடுத்தால் வட்டியுடன்
திரும்பக்கிடைக்கும் என் காதல் !!


நீ உதிர்த்து போகும் 
உன் கூந்தல் நீர்த்துளிகளில் 
உன் வீட்டு உப்பரிகையின் ரோஜா செடிகள் 
வெள்ளிக்கிழமையானால் தானும் 
தலைக்குளிக்க தவமிருகின்றன !!

சொல்லாமல் தான்
செத்துப்போனது
என் காதல்..
சொல்லி சொல்லியே
சாகடிக்கிறாய் நீ..
#உன்னை பிடிக்கவில்லை !!

ஆறுதலுக்காய் அலைந்தேன்
அரவணைத்து கொண்டது
உன் நினைவுகள் 
மாறுதல் மட்டுமில்லை
இக்காதலின் அவஸ்தையில்.. 

என் அணுகுமுறை தான் சரியில்லை
உன்னை அணுகிய உடனே
சொல்லவிடாமல்..
சொல்ல துடித்த உதடுகளை
கட்டி போட்டு விட்டன காதல் பயம் !!

தனிமையான ஓர் பிரயாணத்தில்
தோதாய் உன் நினைவுகள்
அருகே அமர்ந்துக்கொள்ள..
கடந்து விடுகிறது எவ்வளவு
தூரமானாலும்..

இருட்டின் பயம்
உன் உதட்டின்
காயம் சொல்லும்..

# நெருக்கம்


இரவு வானிற்கு
இரண்டாம் நிலா
நீ !!

இரவு கடந்திட
விடியலிலும்..
உன்னை நீங்கா
வானம் நான் !!

என் எழுத்து பிழைகளை
ரசிக்க தொடங்கியலிருந்து
கிடைத்தாள் எனக்கொரு
கவிதை காதலி 

தீர்த்து வைக்க முடியா
ஓர் இரவு சண்டையில்
ஒரு முத்தம் போதுமாய் இருக்கிறது
உன் கோபம் தனிய ♥♥

உன் கை கோர்த்து நடக்க
ஓர் ஆளற்ற சாலையை 
தேடிக்கொண்டிருக்கிறது 
என் காதல் 

அல்ல அல்ல குறையாதது
அட்சையப் பாத்திரமென்றால்..
எழுத எழுத குறையாத
உன் அழகை என்ன சொல்ல..


சந்திக்க தாமதமான நாளொன்றில்
உனக்கு பிடித்த கோன் ஐஸ்க்ரீம் ஒன்றை
வாங்கி வந்து உன்னிடம் நீட்டினேன்
கோபத்தில் பொங்கி வழிந்தாய்
உருகிக்கொண்டிருந்த ஐஸ்க்ரீமை
நானே சுவைக்க தொடங்கிய சிறிது நேரத்தில்
உன்னிடம் எச்சில் ஊறி வழிவதை கண்டு
மீதி ஐஸ்க்ரீமை உன்னிடம் கொடுத்து
உதட்டோரம் வழியும் தேன் கலந்த
ஐஸ்க்ரீமை சுவைத்தேன்
அடடா அதுவல்லவா ஏழாவது சுவை..

எனக்கே தெரியாமல்
என்னை களவாட
பார்க்கிறது
உன் காதல் பார்வை 
எதற்கும் ஜாக்கிரதை..

உன்னை விட ஓர் அழகான
உலகம் எனக்கில்லை
உன்னோடு வாழ்ந்திட ஒரு
வாய்ப்பும் எனக்கில்லை
உனக்கே உனக்காய் வாழ்கிறேன்
யாரோ ஒருவரின் உலகில்
அகதியாய்...

தேவையின்றி எழுகிறது
உனது முன்கோபம்
தேடி எடுத்துக்கொள்கிறது
காதல்..
சிறு பிள்ளையாய் !!



உன் வீட்டிற்கு மட்டும் ஒரு
ஜன்னல் இல்லையென்றால்
ஒரு முழுநேர நிலவை
என் வானம் இழந்திருக்கும் !!


அம்மாவாசையில்
காகங்களுக்கு சோறூட்ட
மொட்டை மாடியில்
கா காவென்று காகங்களை
அழைத்து கொண்டிருந்தாய்..
எனக்கென்ன அம்மாவாசை?
என்னிலவு தான் வந்துவிட்டதேயென
உன்னை பார்த்து கொண்டே
சாப்பிட்டு முடித்தேன் !!

# நிலா சோறு #

விடியலில் வாசல் நனைத்து
காத்திருக்கிறது மழை
நீ கோலமிட..

சேர்ந்து விட்ட
இதழ் முத்தத்தில்
தனித்தே நிற்கின்றன
காதலும் காமமும் !!

அவ்வளவு அழகாடா நான்
எனக் கேட்கும் முன்
ஒன்றை நினைவில் கொள்ள
மறந்து போனாயடி நீ.
உன் பேரழகிலிருந்து தான்
அழகென்ற சொல்லே
பிரிந்தது என்பதை..!!

தலை மாட்டில் உட்கார்ந்து
தலை கோதி விடுகையில்
தாய்க்கு பின் தாரமல்ல
நீ இன்னொரு
தாயாகவேயாகின்றாய்..!!

யாரோ சொன்னார்கள் தேவதைகள்
பூமியில் பிறப்பதுன்டென்று..
உன்மை தான் போலும்
உன்னை பார்க்க கொடுத்து வைத்துள்ளதே !!

மறு பரிசீலனை என்பது
இழந்த காதலில்
இருப்பதில்லை..
மாற்றம் தேடி அலையும்
மனதுக்கு அறுதல்
கிடைப்பதில்லை..


முத்தம் தருகிறாள்
முகம்..

இடம் விட்டு தாவி
எட்டி பிடிக்கிறாள்
உதடுகள்..

கட்டி அணைக்க
விரட்டி பிடிக்கிறது
கை..

பழம் நழுவி
பாலில் விழுகிறது
நீ..

சுமக்க தெரியாத இதயத்திற்க்கு
சொல்லாமல் மறைத்த காதல்
சொல்லிக்கொடுத்து
சொல்லிக்கொண்டே அழுதது
உறவின் மேன்மையை
பிரிவின் கொடுமையை..

வேண்டியதை நினைத்துக்கொண்டு
அலகு குத்திக்கொண்டால்
வேண்டியது கிடைக்குமாம்
அழகி உன்னை நினைத்துக்கொண்டு
இதயத்தில் கை வைக்கிறேன்
நீ தான் வேண்டுமென்று துடிக்கிறது..!!

தங்க மீன்கள் தான்
உலகிலே அழகாம்..
உன் கண்களை காணாதவர்கள்
பேசிக்கொண்டார்கள்..!!


முகில் மூடிய
இரவு வானில்
முகம் காட்டி
விழிக்கிறது
நிலா..

காதலொரு தொற்று நோயாகிட
தினம் தினம் பிராத்திக்கிறேன்
என் காதல்
அப்படியாவது உனக்கும்
தொற்றிக்கொள்ளட்டுமே !!

நினைவுக்குள் வருவது
நீயாக இருக்கையில்
அலறி அடங்கும்
தவறிய அலைப்பேசி
அழைப்புகளை
சரி பார்க்காமல் சட்டென
டயல் செய்து விடுகிறேன் உனக்கு..

உன் வெட்கச் சிரிப்பால்
பூத்து நிற்கின்றன
அந்தி மல்லி
அதிகாலையில் !!

காதல் என் கை வசமாகுமோ
இல்லை காதலிடம் கைதி ஆவேனோ
காதலி நீ சொல்வாயோ..

அப்படி பார்க்காதே வெட்க
வெட்கமாய் வருகிறதென்று
கண்களை பொத்திக்கொண்டு
நீ மட்டும்..
அரை கண்ணால் பார்ப்பது
முறையா..

என் ஸ்பரிசம் தேடி
நீ மடியமர்கையில்
காதலொரு
குழந்தையாகிவிடுகிறது !!


விழிகளுக்குள்
விதை விதைத்து
காதல் வளர்கிறாய்
என்னுள் நீ...


நிலவு சொன்னது,
உனக்கு சோறூட்ட
ஆளில்லையாம்
தரையிறங்கி
வரட்டுமாயென்று..

நிலவை காட்டி
ஊரார் பிள்ளைக்கு தான்
சோரூட்டுவார்கள்

உனக்கு காதல்
ஊட்ட வேண்டுமென்று
சொல்லிவிட்டேன்..

வைரம் வைடூரியமெல்லாம்
பூமிக்குள் தானே கிடைக்கும்
அரிய பொக்கிஷம்
நீ மட்டும் எப்படியோ
பூமிக்கு மேல் !!



விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்
விண்ணை சுற்றுவது போல் தான்
என் காதல் இயற்க்கைகோளும்
உன்னையே சுற்றி சுற்றி வருகிறது !!



சருகலான பாதையென
எழுதிவையுங்கள்
அவள் உதிர்த்துப்போன வெட்கம் 
வழியெல்லாம் சிந்திக்கிடக்கிறது !!

ஆயிரம் தான் சொல்
உன் அழகிற்கு ஈடாகாது
அந்த ஆயிரத்தில் ஒன்றும் 

தேடலில் கிடைக்காத காதல்
தேடி வந்து தொலைந்துப்போன
என்னிடம் தொலைகிறது !!

துணை


தொலைந்து விடு
என்னுள்..
என்னினைவுகளை
அனுப்பி வைக்கிறேன்
துணைக்கு..

என்னழகு நிலா

தொடும் தூரத்தில் தான்
என்னழகு நிலா..
அவளை சூழ்ந்து நானும்..!!



நீரில் மிதந்து வரும் காகித ஓடமாய்
மூழ்கடிக்க படுவேன் சற்று நேரத்தில்
இதிலும் நீ பயணிக்க வேண்டுமானால்
நானிருக்கிறேன் உன்னை சுமப்பதில்
சுமையேதுமில்லை சுகமே..



மௌனமாய் கடந்து விடுகிறாய்
நான் நிற்பதை பார்த்தும்..
கிறுக்கனாகவே கிடந்து தவிக்கிறேன்
உன்னை பார்த்த பூரிப்பில்..



ஆளற்ற சாலையில்
கை கோர்தவாறே
நடக்க தொடங்கிய பின்..
மனதை அலைப்பாய விட்டு
இறுக பற்றிக்கொள்கிறது
காதல் நம்மை.. ♥ ♥



கலர் கலராய் புடவைகளை காண்பித்து
எதை கட்டிக்கொள்ள என்கிறாய்..
உன்னையே சுற்றி வரும்
என்னை கட்டிக்கொள்ளேன்.. ;-)



உனக்காக தான் எனத்தெரிந்தும்
நன்றி சொல்லி
என் ஒவ்வொரு செயலையும்
பாராட்டுகிறாய்..
நன்றி பாராமல் செய்யும்
இக்காதலை மட்டும்
பார்காததை போலவே
போவதேனோ..



என்னில் முளைத்த காதலுக்கு மட்டும்
உன்னிடத்தில் வேர் இருப்பதால்
நீரூற்றி வளர்க்கமுடியாமல்
கிளையெல்லாம் தழையின்றி
பட்ட மரமாய் நிற்கிறது..



இரவின் வானில்
அழகாய் இருப்பது நிலவு..
இரவின் அழகை கடத்தி
நிலவாய் இருப்பவள் நீ !!



எரியும் அகல் விளக்கின்
திரிநுனி சுடரில்
பிரகாசமாய் ஒளி வீசுகிறது
பளிச்சிடும் உன் முகம்!!

திமிராய் ஒரு முத்தம்



ஹம்ம் நீ தானே அது என
எனது ஒவ்வொரு தவறையும்
கண்டுபிடிக்கையில்..
தண்டனையாய் நீ,
தர மறப்பதில்லை
திமிராய் ஒரு முத்தம்..



துள்ளி தெறிக்கும் நீரில்
பாதம் கழுவும் பாவையே..
பாவ விமோச்சனமா நீருக்கு நீ தருவது ?
பாவம்! மோட்சம் பெற்றும்
பாதகம் இழைகிறாய்..
உன் பாதக்கொலுசினை தொட்டு
வணங்கிட முடியாமல்..!!



ஏழு மலை
ஏழு கடல் தாண்டி
உன் இதயத்தை
நீ மறைத்து வைத்தாலும்
எளிதில் கண்டுவிடும் என் காதல்..

 
 
தலை குளித்து முடித்ததும்
நீ கூந்தலை பின்னளிடாமல்
ஊஞ்சலாடும் அழகை
எந்த கவிஞனேனும் பார்த்துவிட்டு
பெண் மயில் தோகை விரிக்குமென
எழுதினாலும் ஆச்சரிய பட இல்லை..



காற்றுக்கு வேலி கட்டுகிறாய்
தாவணியால் உன் முகம் மறைத்து..
என் சுவாசம் நின்றது தெரியாமல்

 
 
எனக்கும் உனக்குமிடையில்
என்ன இருக்கிறது அப்படி
என்று கேட்ட  நண்பர்களிடம்..
எனக்காக நீயிருக்கிறாய்
எனக்கூறிவிட்டு வந்திருக்கிறேன்..!!

தற்செயலான விடைப்பெருதளிலே தான்
தெரிய வைப்பாய் நீ..
என் மீதான உன் காதலை <3 <3



உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥


பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..


உனக்கு என்றால் மட்டும்
என் தேடல் யாவும்
நிகரில்லாததாக தான் இருக்கும்..


பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..

ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..

பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..

உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..

கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..

தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.

ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..


உன்னை தொடாத தூறலும்
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...


விருப்பம் ஒன்று வரும்போது
வேண்டுதல் இருக்கும்..
ஆம் உன்னை விரும்ப
வேண்டுதல் ஒன்றை
உன்னிடம் வைக்கிறேன்..


சொன்னால் கேளென்று
ஆணையிடும் அவளுக்கு
சொன்னால் மட்டும்
 புரிந்து விடுமா என்ன
என் காதல் ??


நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3


தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3

எதை தாங்கும் வலிமையையும்
நான் பெற்றாகிற்று..
அதனாலே உன் நினைவுகளை
சுமையென்றென்னாமல்
சுமந்தலைகிறேன்..

முகம் சுழித்து பழித்து
காண்பிக்கிறாய்..
நீ சிரிக்க நான் செய்த  
என் கிறுக்குத்தனத்துக்காக..

உன் பெயரில் வரும் வாக்கியங்களை
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.



நீ ஒன்றும் சொல்ல
வேண்டியதில்லை..
எனக்கென இருக்கின்றது
உன் மௌனமென்னும் பதில்..

உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥


ஊருக்குள் தலை நிமிர்ந்து
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..


தனியேயான வெளியூர்
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..

யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..


காயம் பட்டால்
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3


நான் தொலைத்த நாழிகை
முழுதும் உனக்காக தான்
என என்னும் போது..
கடிகார ஓசை ஒலித்தது
உண்மையென..


காதலுக்கு நிறம் பெரிதல்ல
என்பதை நினைவூட்டவே
கருமேகம் கரைந்து
பூமியிடம் வருகிறது
மழையாக...

யாரையோ நம்பி
உன் மனதை தருகிறாய்.
என்னையே உனக்காக
இழக்கிறேன் என்கிறேன்
தர மறுக்கிறாய்..



சோறு கண்டயிடமே சொர்கமென்று
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !

நீ தாவணியை எடுத்து
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..

ஆயிரம் கவிதை
சொல்லி போகும்
உன் கண்கள்
அதில் ஒன்று தான்
இது..


நேற்றுவரை ஒன்றும்
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!

மழைக்கு முந்தைய நிமிடம் வரை
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!


முந்தித்தள்ளி முதலாளாய்
வந்துவிடுகிறாய் சிந்தையில் நீ..
பாவம் என் வாழ்க்கை கனவெல்லாம்
புறம் தள்ளி வீழ்ந்துக்கிடக்கின்றன..
பலிக்காத ஒன்றாய்..


Aazh Kulathill Kallerinthu Amarnthirukkiren..
Alai Alaiyaai Vanthu Vattamittu
Mothi Selkindrana Un ninaivugal..
Ondru kooda aaruthalukaai
Ennudan nindruviduvathillai..
Ellam Erintha kallai nokki than adangi pokindrana..
Adangathaa un ninaivai pol..!!

தெப்பகுலத்தில் நீராடி
வெப்பமாக்கி போகிறாய் என்னை..
அணை(னை)க்க ஆளின்றி
உஷ்ணமாகி கிடக்கிறது
உச்சந்தலை..

சொன்னால் கேளுடா !
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!

கந்து வட்டியில் உன்னன்பை
கடனாக பெற்று..
வட்டியை தரமுடியாமல்
என்னை உன்னில் இழந்தமைக்கு
பெயர் காதல்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!

கண்ணை கட்டி காட்டில் விட்ட
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!

நினைக்கும் போது மட்டுமல்ல
நீ வெறுக்கும் போது கூட
நானே முதலிடம்..

உறக்கமில்லா என் இரவுகளை
இருக்கமாக போர்த்திகொள்கின்றன
உன் நினைவுகள் இதமாக..

உனக்காய் மலர்ந்த பூக்கள்
உனக்கில்லாததால் தான்..
உதிர்ந்து விடுகின்றன
யாருக்குமில்லாமல்..!!

விருப்பமின்றி என்னை
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!

எப்போது உன்னை பார்த்தாலும்
முதன்முறை பார்ப்பதை போலவே
பிரம்மிக்க வைக்கிறது
இந்த காதல் ♥

அளவுக்கு மீறினால் அமுதமும் ..
நஞ்சென்று யார் சொன்னது ?
அத்துமீரலுக்கு பிறகு தானே
அடுத்த முத்தத்தை தர
சம்மதிக்கிறாய் நீ..!!


அலட்டிக்கொண்டே நீ தரும்
அந்த ஒற்றை முத்தத்தில் தான்
என் ஆயிரமாயிரம் இன்பங்கள்
நம் ஊடலில் கொட்டிக்கிடக்கின்றன !!


உன்
மௌனத்தை
முடித்துவைக்க
ஒரு
முத்தமிட
ஊடல்களையே
தழுவி
செல்கிறது
உன் செல்ல
கோபங்கள்..!!


en manathirukul
nee varumbothu
Kadhalin mariyaathai
ninithamaaga
un manthai veliye vituvitu
vanthuvittai..


en manathirukul
nee varumbothu
Kadhalin mariyaathai
ninithamaaga
un manthai veliye vituvitu
vanthuvittai..


எப்படி முடிகிறது
உன்னால் மட்டும் ?
எளிதில் பழகிவிட்டு
என் மனதை உனதாக்கிவிட்டு..
எடுத்தெடுப்பில் எனை எறிந்து விட
எளிதில் முடிகிறது
உனக்கு மட்டும் ?

நிலா அழகா
நீ அழகா ?
சாலமன் பாப்பையா
தன் பட்டிமன்ற தலைப்பாக
வைத்தாலும் ஆச்சரியப்பட இல்லை !!

தோற்று போகும் பல காதல் தான்
ஜெய்த்து காட்டுகின்றன
நினைவுகளாக நெஞ்சில் நின்றுக்கொண்டு !!


மழையோடு மழலையாகி
தாழ்வார தண்ணீரில்
கைகளை நனைத்து
மழையை சுவாசித்து
விளையாடுகையில் நானும்
குழந்தையாகி விடுகிறேன் !!


உனக்காக காத்திருந்த
பூக்களை விட்டுவிட்டு
உனக்கு பிடித்த பூக்களை
பறித்து செல்கிறாயே
உன் கூந்தலில் இருக்கும்
பூ வாடும் முன்
இங்குள்ள பூக்களின்
வாடிய கதை
உனக்கு தெரியுமா ?

பாறையில் முளைத்த
காட்டு விதையாய்
என் இதயத்தில்
வேர் விட்ட
உன் காதல் கதை
நீ அறிவாயா ?

Ovvoru nimidamum
unakaai kathirupen..
Uriyena uyir vendumendraal sol..
unake naan kudupen !!


Yar yaro en vazhvil
vanthu sendrargal..
Nee mattum than
thangi sendrai..
En manathil..


En Kangal kalangum bothu
thoosi vizhunthatha ena vinavum
avargaluku enna solluven
un pirivaaal innum
iru thuligalai thavira..


உன் கன்னக்குழியில்
நான் விழுகிறேன்..
என் எண்ணத்தில்
நீ எழாமல் இரு
நான் சற்று நேரம்
உறங்கி எழுகிறேன்
உன் மடியினில்...

♥ ♥
உண்மையாய் சொல்ல
வேண்டுமென்றால்
நான் உன்னை உயிராய்
காதலிக்க வில்லை
♥ ♥
.
.
.
♥ >3
உயிருக்கும் உயிராய்
காதலிக்கிறேன்..
♥ ♥

Aval ootriya
kathal theeyil..
en vazhkaiyi micha theebam
Erinthu Kandirukindrathu.. !

Irukamaga katipiduthu
paduthu kondaal kuliraathaam..
Enaku viyarka aarambithu vitathu..
Aval kathagathappil..


Vendaatha ennai
Vetti Erinthirukalaam
Othuki Thaliyatharku Bathil..


Vidiyalin poruttu andraadam
thavamaai thavamirukindrana
un veetu Vasal..
Nee poda pogum kolathirkaaga!!

அவ்வாண்ணிலவு
உன்னை பார்த்த வெட்கத்தில்
மாதத்தில் ஒரு நாள் மறைவதையும்..
கிறக்கத்தில் மீதி நாள் ஒளிர்வதையும்
அறியாதவர்கள் இயற்கை என்றார்கள்..

தூர்வானத்தை கையில் பிடிக்க
துள்ளி குதிக்கிறாய் நீ
வானமே உன்னை
தழுவிக்கொள்ள மேகமாய்
தரையிறங்கி வந்து செல்கிறது..

En Theeraatha Kobam
Un thevittatha Kadhalal
Pizhaithu pogiraai nee...
Pogum bothu Azhaithu sellamal
ennidam yeno vitu sendruvittai
un ninaivugalai ??


தொடர் மழையின் காரணமாக
மூன்று நாள் விடுமுறையென
அறிவிப்பாகும் வானிலை அறிக்கை..
எனக்கு மட்டும் பெருத்த
ஆனந்தத்தை தரும்..
பின் உன்னோடு நனைந்திட தானே
அச்சந்தர்ப்பம் வாய்த்துள்ளது .. ♥


கட்டிக்கொள்ள கலர் கலர்
புடவைகளை காண்பித்து
எதை கட்டிக்கொள்ள என்கிறாய்
உன்னையே சுற்றி வரும்
என்னை கட்டிக்கொள்ளேன்..


மருதாணியும்..
நானும் மட்டுமே அறிவோம்
உன் உள்ளங்கை பட்டு
வெட்கத்தில் சிவந்து போகும் கதை


வருந்தி அருந்துகிறேன்
உன்னை மறப்பதற்க்கான
மருந்தினை..
ஞாபக செல்களை கூட்டி
உன் நினைவை மேலும்
பெருக்கி செல்கிறது அது ♥

உனக்கென ஓர் உலகம்
என்னில் அமைத்து
அதற்க்கு காதலென்று
பெயர் வைத்துள்ளேன்..
அழிந்து விடுமென்று அச்சமில்லை..
அழித்து விடுவாயோ என்று தான்
என் அச்சமெல்லாம்..



பத்திரமாக வைத்துக்கொள்
நான் சொல்லயிருக்கும்
ரகசியத்தை..
கடுகளவு கசிந்தாலும்
என் காதல் உனதாகிவிடும் ♥

அழகான பெண்களை கண்டால்
கண்களை மூடிக்கோங்க
தவறி விபத்து நடந்தால்..
காதலென்று சொல்லாதிங்க..


உன்னை என்ன சொல்லி மெருகேற்றுவேன்
ஊத்தின சிலையாய் நீ இருந்தால் ??
நான் கவிஞன் என்று பெயரளவில் தான்
சொல்லி கொள்ள வேண்டும்.

ஒரு முத்தமிட்டு
தொடங்கி வை
என் இரவினை..


தேடல்களோடு தொடங்கும்
உன் கட்டில் விளையாட்டு
முடிவுற்றும்..
ஏதோ ஒரு தேடலோடு தான்
அடுத்த இரவையும் எதிர்பார்க்கும்...

தடுமாறி விழும்
உன் முத்தங்கள்
தலையணையில் விழ,..
தினமும் தவமிருக்கின்றதடி..
மீண்டுமொரு தடுமாரளுக்காக
தவறினாலும் இனி என்
கன்னத்திலே விழட்டும் ♥

நடு நடுவே நீ
இடும் முத்தங்களை
அடைக்காத்து வைத்துக்கொள்கிறேன்
பின்னாளில் குட்டி போடும்
புத்தக மயிலிறகாய்..
அத்தனையும் உனக்கே தருகிறேன்.. ♥

ரசிப்பது உன்னை தான்
என தெரிந்தும்..
எப்போதும் தள்ளி நின்றே
தரிசனம் தருகிறாய்..
உன் அன்பு பக்தனுக்கு !!


உன்னை என்னதான்டி பண்றது என்றால்..
உனக்கு பிடித்ததை பண்ணு என்றவள்
அருகில் வர அனுமதி மறுக்கிறாள் :-/

Urangamale Vizhithirukiren..
Unai Sathaa ninathukondu..
Uranga vidu..
Illayel Urangi vidu
avalin ninaive..

உனக்கு மட்டும்
யாரடி சொல்லிக்கொடுத்தது ??
நான் பார்கையில்
திரும்பிக்கொள்ளவும்
பார்க்காத தருணம்
திரும்பி பார்க்கவும் ??

உன் அன்பை மட்டும்
ஆயுளுக்கும் கொடுத்து
என்னை அடிமை
பத்திரம் எழுதிக்கொள்
என் ஆயுள் வரை..


பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது.. </3

முன்பு அளவுமீறி என்னை
நேசித்தவர்கள் தான்
இன்று காரணமின்றி வெறுக்கிறார்கள்..
காரணம் என்னவோ
என் பெயரில் ஏமாற்றியர்வகளே...

# வருத்தமுடன் காதல்..

உன்னை விட்டு எங்கேயும்
தனியே செல்ல முடிவதில்லை..
உன் நினைவுகளை தான்
கூடவே அனுப்பிவைக்கிறாயே ♥


Thol Nazhuvi Vizhum
Aval Munathani Selai..
Avan Paarvai nazhuvi
Achamayam aval mel vizha..
Ethetchaiyaaga nadantha
seiyaluku..Solivitu ponaal
Alaiyuthu paar endru.. !!


தூண்டில் போடுவதே
மீன்கள் என்றால்
என்ன மாட்டும்
என் இதயத்தை தவிர ?

Nee Illatha Pothu
Varunthiya Manam
Nee Irukkum Bothum
Thudikirathu..Adutha Nodi
Nee Piriya Povathai Enni.. :'(

Yaro En Peyarai
Solli Azhaikum bothelam..
Nee Azhaitha Athe Ethirparpil..
Thirumbi Parkiren..
Verumaiyudan Thirumbividukiren.. !!

தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு ♥



நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் ♥


சொன்னால் கேளென்று
ஆணையிடும் அவளுக்கு
சொன்னால் மட்டும்
புரிந்து விடுமா என்ன
என் காதல் ??

நீயில்லா தவிப்பில்..
மரிக்கும் ஒவ்வொரு நொடிகளும்
மௌனிக்கும் உயிரோசைகளும்
உன் நினைவுகளுக்கு உயிர் விடுகின்றன..
வேண்டாமடி ..
வாழ்வானாலும் சாவானாலும்..
உன்னை நினைத்து கொண்டே போகட்டும்.

பருவ மழை பொய்த்து
வெடித்து விரிசல் விட்டு
வான்மழைக்கு காத்திருக்கும்
பாலை நிலமாய்..
காத்துக்கிடக்கின்றன என் காதல்..
உன் ஒற்றை பதிலுக்கு..

ஏதேதோ நீ பேசிக்கொண்டிருக்க..
எதுவும் காதில் விழாதவனாய்
மெய் மறந்து..
ரசித்து கொண்டிருந்தேன்...
காதலை சொன்ன போது
மௌனம் தரித்து விட்டு போன
உன் உதடுகளையே !!

Oru Muthathil Mudinthu viduma
unathaasaigal ?
Therinthe thara vaithullen
1000 Unakku ♥

Vaa Endrazhaikum
Un idhazhgalai..
Vaari Anaithukolla
Vaai Varukirathu..
Pin Un Kaikorthu
Kaal payanam Thodargirathu..♥

சாக வரம் வேண்டாம்.
சாகும் வரை
உன்னை நீங்கா வரம்
கிடைத்தால் போதும் !!


உன்னை வெறுக்கத்தான்
முடியவில்லை..
மறக்கலாம் என்று நினைத்தால்
நினைவெல்லாம் நீயே
ஆட்கொள்(ல்)கிறாய்..!!

Theriyaamal Seitha Thavaruku
Nee Therinthe Thandipathil
nyayamillaiyadi..!
Muthamittal..
Satham varathana seiyum ?
Atharku yen uthatin mel
Viral Vaithu Thadukiraai..!



Uravugalellaam Urangivida..
Iravugal Thorum..
Kanvizhithu Rasithirupaal..
Naan thoongum azhai..
En Azhagu Nila ♥




உன் தொப்புள் குழி
பம்பரம் ஏதும் விடாமலே..
எனை சுற்றி விட்டு
போகிறது !!



எண்ணிலடங்கா நட்சத்திரங்களை
ஒரு மூச்சில் விறுவிறுப்பாய்
என்ன தொடங்கியிருந்தாய் நீ..
இரவு முழுதும்
துணையாக இருந்தேன் நானும்
உனக்காக அல்ல ..
உன்னை நிலவு ரசிக்காமளிருக்க..!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive