என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

தேடல்:



எங்கோ பிறந்த உன்னை
ஏனோ பார்த்து விட்டது
என் கண்கள்..
என் சொல் படி நடக்காமல்
அங்கும் இங்குமாய் அலைபாய்கிறது
நீ நடந்து போன பாதையையே தேடி..!

கேமரா



அழகை ரசிக்க முடிந்த என் கண்களை விட
அழகாய் ரசிக்கிராயே இயற்கையை
பிடித்ததும்..பளிச்சென்று ஒரு கிளிக் !!
---- கேமரா

துணை:



உன் நினைவுகள் மட்டும்
துணைக்கு வராமல் போயிருந்தால்..
என்றோ தனித்திருக்கும் என் இதயம்..
நீ இன்றி தவிக்கும் என்னை போல..!

பிரிவு:



ஒரு இடத்தில நீயும்
ஓரிடத்தில் நானும்
வசிப்பது.. சுலபமடி..
உன் நேசமில்லாமல் தவிப்பதும்
அதனின் வலியும்
எனக்கல்லவா தெரியும்..!

வறட்சி:




நீரற்ற குளம் போல
வறண்டு போனது..
நீயற்ற என் வாழ்க்கை..!

Price of Lonely

தலையனையோடு தாலாட்டு தூக்கம்..
மின்விசிறியின் ஆரிரோ பாடல் ..
நண்பர்களின் முப்பொழுது   
குறும்செய்தி வாழ்த்துகள்..
இதெல்லாம் என் தனிமைக்கான 
விலை மதிப்பில்லா சொத்துகள்..!

ஐஸ்:



உருகி உருகி காதலித்து..
உதட்டோடு உறவாடி..
உயிர் விடுகிறது
அவள் சப்பி சுவைத்த
குச்சி ஐஸ்..!!

கணக்கு-காதல்:



கூட்டலிலும் கழித்தலிலும்
உருவானது கணக்கு..!!
கூடி பேசி பழகியதில்
உருவானது நம் காதல்..!!

சூறாவளி புயல்:



விதிமுறை இல்லாமல் வருகின்றதடி
உன் நினைவுகள்..
விழிக்கும் முன் தொடங்கி
விழிமூடும் வரை நீடிக்கும்..
ஒரு சூறாவளி புயல்..!!

இனிய இரவு:



தூக்கத்தினை தழுவும்
உன் கண்களுக்கு
இமைகளின் அரவணைப்போடு
இனிய இரவுகள்..!

விடியல்:



பழைய நினைவுகளுடன்
புதிய விடியல் எல்லோருக்கும்
எனக்கு மட்டும் இருளாகவே
பிறந்தது இந்த விடியலும்
அவள் நினைவுகளை சுமந்துகொண்டு..!

அழகு கவிதைகள்:


வெள்ளை காகிதத்தில் ..
பேனா மை கொண்டு
எழுதினால் தான் கவிதையா ??
இல்லவே இல்லை..
என்னவளே எதேர்ச்சையாக
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையும்
அழகு கவிதைகளடி..!

நிமிடத்திற்கு ஒரு கவிதையா ?

நிமிடத்திற்கு ஒரு கவிதையா ?
உங்களால் மட்டும் எப்டி முடிகிறது என்கிறாள்..??
அடி பாவி.. நான் சொல்வதெல்லாம் உன்னை பற்றியே
என சற்றே யோசிக்காமல் பேசிவிட்டாயே..!

பிரியம்:



பேருந்தில் ஏறினாள் ஜன்னலோர
இருக்கையாய் தான் தேடி பிடிப்பாள்
களைந்து செல்லும் மேகத்தை ரசித்தவாறும்
சில்லென்று வீசும் காற்றில்..பற்களை கடித்துக்கொண்டும்
கரைந்து பெய்யும் மழை சாரலை ரசித்தவாறும்
தென்றல் தீண்டி கலைத்து போகும்
கூந்தலை சரிசெய்து ரசிப்பதிலும்
அவளுக்கு அலாதி பிரியம்..!

பொம்மை:

நீ கடைசியாக தூக்கி எறிந்த
விளையாட்டு பொம்மையாகட்டும் 
என் இதயம்..!!

கோவம்-புன்னகை:



மன்றாடியும் பார்த்தேன்..
மண்டியிட்டும் பார்த்தாகிவிட்டது..
 எதற்கும் தணியாத 
அவளது கடும் கோவம்..
 ஒரு முழ மல்லிகை பூ..
 மலர்வித்தது புன்னகையை..!

இச்சை மொழி:



கொச்சை மொழியில் பேசாதே
 என காதை திருகுகிறாள்
 அவளது இச்சை மொழியில்..!!

தவம்:

கை கொட்டி கும்மி விளையாட்டு விளையாடதே கண்மணி
அடிக்கடி களைந்து போகிறது..
உன்னை கண் கொட்டாமல் பார்க்கும் தவம்..!!

(சிரிப்)பூ :



ஒரு மாலை பொழுதில் மலர்ந்த
முல்லை பூவை சூடிவிட்டேன் அவள் கூந்தலில்
அழகாய் பூத்தது (சிரிப்)பூ அவள் இதழில்...!!

Huggy..



முத்தமிடும் போதெல்லாம்
ஏனோ இருக்க மூடி கொள்கிறாள் கண்களை..
இறுக்கி அணைக்க வேண்டிய தருணத்தில்..

ஞாபகம்



விடுமுறை விண்ணப்பம் ஏதேனும் இருந்தால் சொல்லடி..
பூர்த்தி செய்து ஒப்புதல் வாங்கிகொள்கிறேன் முன்னதாகவே..
தினமும் வந்துவிடுகிறது உந்தன் ஞாபகம் ..!!

அழகு:



உன் கண்ண குழி அழகு தானடி..
அதற்காக அடிக்கடி இப்படி சிரிக்காதே
எழுந்து வர முடியலவில்லை ஒவ்வொருமுறையும்..

சைட் அடிப்போம் சந்தோசமா இருப்போம்:



தடக் தடக் குதிரை வண்டியின் ஓட்டத்தில்..
தடம் புரண்டுது போல ஏறி இறங்கியது
சிறு வேக தடையில்..
ஆவென வாயை பொத்தி எடுத்து..
வெட்கத்தில் தலை சாய்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தல்..
நான் பின் நின்று ரசிப்பதை கண்டு..!

அறுசுவை:




அறுசுவைகளில் ஒரு சுவை மட்டுமே
அறிந்தது நம் காதல்..
உதடுகளை நனைத்த கண்ணீரிலிருந்து..!!

நினைவலை:


 
கரை காணாமல் வட்டமிடுகிறது நீரலை..
கரை இருந்தும் ஏறாமல்
அடம்பிடிக்கிறது அவள் நினைவலை ..
ஏனோ என் உள்ளே..

Love Pain:



உன் முகம் துளைத்த என் கண்கள்..
எதையோ தேடி குளத்தில் தூக்கி எறிந்த கற்கள்..
அலையென என் கால் தடம் சேர்ந்தது..!!

ஞாபக அலை:



ஆழ குளத்தில்...
ஒவ்வொன்றாக நான் தூக்கி எறிந்த கற்கள்
நம்
ஞாபக அலையினை எழுப்பி வட்டமிடுகிறது..
உனையே சுட்ட்ரும் என்னை போல...

காதலாகி...




அழகான ஒரு முன்-இரவினில்
நித்திரையில் நான் நீந்தி கொண்டிருக்க..
சப்தமில்லாமல் மெல்ல குடி ஏறினாள்..
வந்த சுவடு தெரியாமல்..
என் நினைவினில் அவளின் ஞாபக    
விதைகளை வீசிவிட்டு..
பிரிந்தால்..சென்ற சுவடு அழியாமல்
காதல் மழைக்கு பின்..
முலை விட்டது எங்கள் உறவு..!

Remembarance of Nadodigal Ananya:



தாவணி சேலையில்..
பின்னப்பட்ட ஒட்டறை ஜடையை சுற்றி கொண்டே..
துள்ளி  துள்ளி ஓடி கொண்டிருந்தாள் ..
இசைக்கு மயங்கி ஆடும் பாம்பை போல..
இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தது என் கண்கள்..
தெரு முனை முற்றும் வரை..!

திருக்குறள் :



பொருளுரை இல்லாமல் என்னிடம்
அவள் விட்டு சென்ற இரு வரி "திருக்குறள்"
"உன்னை எனக்கு பிடிக்க-வில்லை
என்னை மறந்து-விடு"

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers