என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!



நான் மீதம் வாய்த்த 
அரை டம்ளர் பாலை
அவள் அள்ளி பருகையில்..
காமக் கதவின் பூட்டின் ..
திறவு கொலை உள்நுழைத்து விடுறேன்..!

கண்ணாடி-4



உன் மொத்த அழகை எனக்கு பின்..
உனக்கு பிரதிபளித்தவனே 
உன் வீட்டு கண்ணாடி..!!

கண்ணாடி-3



என் கவிதையால் விளக்க முடியாத
உன் அழகை.. உனக்கு விளக்கவே
கடவுள் கண்ணாடியை
படைத்தான் போலும்.. !!

கண்ணாடி-2



நான் அழுதாலும், சிரித்தாலும்   
நீ சிரிப்பாயானால்..
நீயும்  என் நண்பனே..
#கண்ணாடி
 

கண்ணாடி-1



என்னை கேட்டால்..
உன் வீட்டு கண்ணாடி
தேவையில்லாத அழகு சாதன
பொருளாகவே தோன்றுகிறது..
தினம் தினம் என் கவிதையால்
 உன்னை அழகூட்டுவது போதாதா ?

காதல்




கள்ள விழிகளில்
காதல் வலை வீசி செல்கிறாள்..
தொண்டை முள்ள சிக்கி..
சோற்றுண்டை உறட்ட செய்கிறது
காதல் ..!

நிலவு-3



அம்மாவாசை தோறும் ..
உன் முகம் மறைத்து
வைக்கப்படுவது  ஒரு விதத்தில் நல்லதே ..
இல்லையேல் அம்மாவாசை என்ற
மரபையே மாற்றி எழுத
வேண்டியே நிலைமை
வந்திருக்கலாம்..!

நிலவு-2



மூன்றாம் பிறைக்கு முன்..
இரு பிறை நிலவினை..
எடுத்து ஒட்டி வைத்ததே அவள்
கண் புருவம்..!

நீயே மூழ்கி கிடக்கிறாய்


கவிதை எழுதலாம்
என அமர்கையில்..
என் யோசனையில்
நீயே மூழ்கி கிடக்கிறாய்...!

நினைவுகள் :



அட்சய பாத்திரமாய்
உன் நினைவுகள்..
எத்தனை கவிதை
எழுதினாலும்..
அடங்காத  பசியாய்
தீராத  தாகம்  போல ..
எழுதி  கொண்டிருக்கிறேன்
உன்  நினைவுகளை..!

நிலவு-1



நிலவுக்கு வண்ணத்தை கொடுத்தவன்..
உன்னை படைத்த பிரம்மனாகவே   
இருக்க கூடும்..!

தனிமை-வலி:



ஏதோ ஒரு சாலையில்
தனிமையில் நடக்கையில்
புரிகிறது..
கை கோர்த்து நடக்க
நீ இல்லாத வலி..!

அன்பே நீ எங்கே ?



பிரிவால் துயருற்றேன்..
உன் அருகாமை இல்லாமல்...

வலி தந்தும்..
காயங்களை ஆற்றினாய்..

மருந்தின்றி வாழ்கிறேன்..
உன் அன்பே மருந்தாய்..

தனியே நடக்கிறேன்
நடை பிணமாய்..

தனிமையில் அழுகிறேன்..
கண்துடைப்பார் எவருமில்லை..

கூட்டமிருந்தும்
வெறுமை..

அன்பே நீ எங்கே ?

எப்போதும் நீ வேண்டும்:



இனிமையாய் பேசும் இனியவளாய்..
தோழமையுடன் தோழியாய் ..
நட்புடன் நட்பாய் ..
காதலுடன் காதலியாய் ..
கொஞ்சிடும் சிறு பிள்ளையாய் ..
சண்டையிடும் எதிரியை ..
பாசத்தில் தாயாய் ..
பகிர்தலில் மனைவியாய் ..
எப்போதும் என் வாழ்வில்
நீ வேண்டும் !!



தொலைவினில் ஊஞ்சல் ஆடும் நிலவொன்று
பூமியில் தாலாட்டிட கண்டேன்...
கல்லெறிந்து அமைதியாகும் குளமொன்றில் !

திக்கிக் குழைகிறேன்:





அவள் பெயரினை உச்சரிக்க
எத்தனிக்கும் முதன் முறை
மழலையை விட அதிகமாய்
திக்கிக் குழைகிறேன்..!

சொந்தமனவளே



என் இதயத்தில் உன் காதலை சுமந்தேன்..
இன்று கண்ணீரை சுமக்கிறது கண்கள்..
வற்றாத காதலாய்..
வழிகிறது கண்ணீர் ..
இழக்கிறேன் உன்னை ..
எனக்கு சொந்தமனவளே..!


 
வெட்கத்தில் முகத்தை மூடிகொள்ளதே..
உன் வெட்கம் தாளாமல் 
தன்னையே ஒலித்து கொள்கிறது நிலவு
மேகத்தின் உள்ளே !!

காதல் பயணம்




உன்னோடு என் காதல் பயணம்..
மணத்தில் முடிவதும்
மரணத்தில் முடித்து வைப்பதும்
உன்னிடமே உள்ளது !

குழந்தை பருவம்:



காற்றூதி பரக்க விட்ட
பலூனை கயிறு கட்டி
பிடித்து வைத்தேன்..

நுரை ததும்பிய சோப்பு நீரை
வண்ண வண்ண வானவிள்லாய்
விண்ணில் மிதக்க விட்டேன்..

சொப்பு சாமான்களுடன்
குட்டி வாண்டுகளோடு
மண் வீடு கட்டி விளையட்டு..

தாய் சேலையில் யானை கட்டி
தாலாட்டு அவள் பாடிட
இதமாய் கன்னுரங்கினேன்..

பசிக்கு எழுந்து அழ ..
பிசைந்து எடுத்து சோற்றினை
ஊட்டி விட..மடியிலே இளைப்பாறுவேன்...

மீண்டும் ஒருமுறை வாழத் துடிக்கிறேன்
அந்த குழந்தை பருவத்தினை !

பொய் !



என்னிடம் என் மனம் 
பொய் கூறும் ஒரே சந்தர்பம் 
அவளும் உன்னை காதலிப்பாள்
என்ற நம்பிக்கையோடு
இரு என்பதில் இருக்கிறது  !

காமம்


இரவு வந்ததென
தூங்க செல்கையில் ..
எப்போதும் முந்திகொல்கிறது
எங்களுக்கிடையில் காமம் !

Romance-3



விடியாத இரவினில்
பலிக்காத கனவொன்று
கண்டேன்..

பிடிக்காத கள்வனாய்
ஊடுருவினேன்..
பகட்டுகாரியாய் பாசாங்கு
பண்ணினாய்..

இதழ் கடித்து
எச்சில் பருகினேன்..
இதழ் மட்டும்
மீதம் வைத்தேன்..

இனம் புரியாமல்
கலவி கொண்டேன்
இம்சைகள் முடிய..
ஆடைகள் பூண்டோம்..!

காலன்-காலம்:

காலன் வருவதற்குள்
உன் காயங்கள் ஆறும்
காலமும் வரும் !!

பதிலு(கேள்வி)க்கு பதில்

Girl:Naan
Boy:Enakkanaval nee
Girl: :-O Nee
Boy:Oru ezuthil mudiyum kavithai nee
Girl:Kavithai
Boy:Unnaiye boomiyil padaikirargal
Girl:Padaippu
Boy:Antha bramanin azhagu oviyam
Girl:Azhagu
Boy:Unathu marupeyar
Girl:hahaha... Sirippu
Boy:en kavanathai eerkkum kurum paadal
Girl:Eerppu
Boy:enai ariyaamal unnil vizunthathu
Girl:Kavanam
Boy:Adikadi athai thirudi sendru vidukirai nee
Gilr:Thiruttu
Boy:Kana nodiyil naan Izhantha idhayam
Girl:Idhayam
Boy:Kadhalikaga amaikka pata aangalin azhagiya kovil
Girl:Kadhal
Boy:Unidam ethirparkkum ore bathil..ennudiya ore kelvi.. enai kathalipaya ?

அன்பு:

 
என்  அன்பை
உன்னோடு
 
நிகரிட்டு

பார்கதே

நிச்சயம்

தொற்றுவிடுவாய்

நீ
!

புன்னகை:





குறை மாதத்தில் பிறந்த
குழந்தை போல  உள்ளதடி..
பிறக்கும் அந்த அழகு
புன்னகையை நீ மறைப்பது ..!

மழை



மாலையில் நீ
விளையாடுவதைக் கண்ட மேகம்
மழையென உன்னோடு
விளையாட வந்ததோ ?

காதல் வந்தால்
கவிஞன் ஆகிறான்
மனிதன் !

கண்ணக்குழி :



எனை கொன்று புதைக்க
சுடு குழி எல்லாம் வேண்டாம்
நீ சிரிக்கையில் விழும்
உன் கண்ணக்  குழியே போதுமடி !

கோவில் கட்டி விடுவார்கள் :



இப்படியே இன்னும் கொஞ்ச நேரம்
நீ தாவணி சேலையில் கை குதளிட்டு
அசையாமல் அமர்ந்திருந்தால்..
முதன் முறையாக தேவதைக்கென
கோவில் கட்டி விடுவார்கள் போடி !

# அப்பா

எத்தனை கவிஞர்கள்  
உருவாகினாலும்..
அவர்களுக்கு உருவம் கொடுத்து
உருவாக்கிய உன்னை
ஒதுக்கி வைத்து விடுகிறார்கள் !

கோவம்:



திடுக்கென்று பின்னாலிருந்து
கட்டி அணைக்கையில்
ஒவ்வொரு முறையும்
அவள் கோவத்தை காட்டி விடுகிறாள்
நறுக்கென்று காது மடல் கடித்து !

மயக்கம்




என் செவிகளில் ஒலித்துகொண்டிருக்கும்
இசைக்கு சொந்தக்காரி நீ தானோ..?
உன் கால்களில் உரசி கிடக்கும்
கொளுசிடம் சொல்லிவிடு அன்பே ..
உன் சிரிப்பை விட..
அதனின் இசை ஒன்றும் பெரிதல்ல
என்னை மயக்க..!

அழகி



நான் ஒரு கவிதை
எழுதி முடித்து..
ஒவ்வொரு முறையும்
பேனாவை கீழே வைக்கையில்
உன் அழகில் ஒன்றை
வர்ணித்து விட்டதாக எண்ணி
ஆனந்த பட்டுக்கொள்கிறது மனம்!

எப்படி சொல்ல ?

உன்னை ஒரு கவிதை
எழுதிட முனைந்து தோற்றேனடி
உன் அன்பை ஒரு கவிதையில்
எப்படி சொல்ல ?

உன் நினைவோடு :


கை தொடும் தூரத்தில்
அன்பே நீ இருந்தும்..
எனக்கு கிட்டாத பொருள் போல 
உன்னை தேடி அலைகிறேன்
எப்படியேனும் சேர..
முடிவினில் ஜெய்தது பிரிவொன்றே..
இருந்தும் உன் பிரிவுக்கும்
அர்தம் தந்தது காதல்..
உன் நினைவோடு வாழ தொடுங்குகிறேன்
உன்னோடான எனது வாழ்கையை..!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive