என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

ஓடி வா நிலவே..



சற்று முன் ஒலித்த
வானிலை அறிக்கையின்படி
மழை வர நேரம்மாகுமாம்
அது வரை என்னோடு விளையாட
ஓடி வா நிலவே..
வானம் குடை பிடிக்க..





சற்று முன் காய்ந்த
கடற்கரை மணலில் கிடக்கும்
உன் கால் தடங்களை சேகரித்து
கொல்லவா அலை அடிக்கிறது ?

ஐ லவ் யூ



உன் சிறு புன்னகை பார்த்து
பூக்கள் மலரும்போது
ஏன் என்னுள்
காதல் மலரக்கூடாது ?
#ஐ லவ் யூ

என் காதல் என் கையிலில்லை..



வார்த்தைகளில்லை உனக்கு பதிலுரைக்க
வரம் ஏதும் பெறவில்லை..
நான் காதலிக்க..
தவம் மட்டுமே மிஞ்சியது..
என் காதல் என் கையிலில்லை..



நனைதலின் சுகம்
நனைந்த பின்
அவள் வசை பாட்டிலும்
அவளின் கதகதப்பான அணைப்பிலும்..
முந்தானை தலை துவட்டளிலும் புரியும்..

என்ன விட்டுடு.





இறக்கம் கொண்டு
தாக்காமல் செல்கிறது
இரண்டாம் காதல்
புயல் சின்னம்..

மழையும் மண்-வாசமும்...





ஒருவரி கவிதையாய்
முடிந்து விடுவதில்லை
மழையும் மண்-வாசமும்...

என் காதல்




மறுபடி மறுபடி
பிறந்துகொண்டே இருக்கும்
உன் மீதான என் காதல்
வானில்.. நட்சத்திரமாக !!

மேகமானவளே..



மழையாகி நீ கரைந்தாலும்
மண் வாசமாய் உன் சுவாசிக்கவே
செய்கிறேன்..
#மேகமானவளே..

கண் ஜாடை..





ஜாடை வைத்து
பேசுவார்கள் என்பார்களே..
இன்று தான் நானும் பார்த்தேன்
அவள் கண் ஜாடையால் பேசியபோது..

தேவதைலோகமென்றா ?



வேற்றுகிரகமொன்று
உனக்கென அமைத்தால்
என்ன பெயர் வைப்பேன்..
தேவலோகமென்றா ?
தேவதைலோகமென்றா ?

என்னோடு இருப்பாயா உயிரே ?



ஏழு ஜென்ம வாழ்கையில்
இந்த ஜென்மத்தில் நீ இல்லை போகட்டும்..
எடுக்க போகும் ஜென்மத்திலாவது
என்னோடு இருப்பாயா உயிரே ?
உறுதிமொழி கொடுத்தால் பிறப்பேன்..
இல்லையேல் உன்னினைவோடு
முடித்துகொள்கிறேன் என்
ஏழு ஜென்ம வாழ்க்கையை..
இஜ்ஜென்மத்தோடு ..!

அழகி..



கவிதைகலென்றால் நிறைய பொய்கள்
நிறைந்து கிடக்குமாமே..
என் கவிதைகளில் மட்டும்
நீயே நிறைந்து காண்கிறாய் அழகி ..

பொய்..



கவிஞர்கள் கவிதைகளில்
பொய்களாய் அளந்து வைப்பார்களாமே    
நான் முதலில் உன்னை பற்றிய
உண்மைகளை வர்ணித்து விட்டு
பிறகு பொய்களை சித்தரிகின்றேனே..

அழுது புலம்பினேன்..



நனைத்து செல்லும்
இம்மழையிடம்
அழுது புலம்பினேன்..
புதைந்து போன
அவள் நியாபகங்களை
புரட்டி போடவே
வருகிறாய் நீ..

கொலை..



யாருமற்ற சாலையில்
உன்னை தேடிக்கொண்டு நடக்கையில்..
என்னை யாரோ போல
பார்த்து செல்கிறாய்..
இப்படியும் கூட கொலை செய்யலாம்..

வெறுக்க தொடங்கிவிடுகிறாய்..



என் விருப்ப பாடல்களின் வரிசையில்
உன் விருப்பங்களை கோர்த்து
ரசித்தேன்..
என் விருப்பங்களை மட்டும்
நீ வெறுக்க தொடங்கிவிடுகிறாய்..



வெகுநேர காத்திருப்பும்
பொறுமையாய் கடந்து செல்லும்
மணித்துளிகளும்..
முட்களாய் சுற்றி சுற்றி குத்தும்..
தாமதிப்பதும் தனிமையில்
அழ்துவதும்  உன் குணம்..
என் மனம் விரும்பவே செய்யும்..
மாறாக நீ வெறுத்தாலும்..

பழைய காதல் பேச்சு..




நீண்ட நேர உரையாடல்
உனக்கு புளித்து போன
பழைய காதல் பேச்சு..
உளறி கொட்டும் மனமெனக்கு
உதறி செல்லும் மனமுனக்கு..

காதல்



திரும்பி போக முடியாத
ஓரிடத்திற்கு திரும்பத் திரும்ப
அழைக்கிறது காதல்
அவள் என்னை வெறுத்துவிட்டால்
புரிந்துக்கொள் மனமே..

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive