என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!



ரோஜாவே அழகு தான்
அதற்க்கெதற்க்கு மல்லிகையால்
அலங்காரமெல்லாம் ?

அன்பை கடன் கொடுக்க முடியுமா ?

சொல்ல முடியாதென்றாலும்
நீ கொடுத்தால் வட்டியுடன்
திரும்பக்கிடைக்கும் என் காதல் !!


நீ உதிர்த்து போகும் 
உன் கூந்தல் நீர்த்துளிகளில் 
உன் வீட்டு உப்பரிகையின் ரோஜா செடிகள் 
வெள்ளிக்கிழமையானால் தானும் 
தலைக்குளிக்க தவமிருகின்றன !!

சொல்லாமல் தான்
செத்துப்போனது
என் காதல்..
சொல்லி சொல்லியே
சாகடிக்கிறாய் நீ..
#உன்னை பிடிக்கவில்லை !!

ஆறுதலுக்காய் அலைந்தேன்
அரவணைத்து கொண்டது
உன் நினைவுகள் 
மாறுதல் மட்டுமில்லை
இக்காதலின் அவஸ்தையில்.. 

என் அணுகுமுறை தான் சரியில்லை
உன்னை அணுகிய உடனே
சொல்லவிடாமல்..
சொல்ல துடித்த உதடுகளை
கட்டி போட்டு விட்டன காதல் பயம் !!

தனிமையான ஓர் பிரயாணத்தில்
தோதாய் உன் நினைவுகள்
அருகே அமர்ந்துக்கொள்ள..
கடந்து விடுகிறது எவ்வளவு
தூரமானாலும்..

இருட்டின் பயம்
உன் உதட்டின்
காயம் சொல்லும்..

# நெருக்கம்


இரவு வானிற்கு
இரண்டாம் நிலா
நீ !!

இரவு கடந்திட
விடியலிலும்..
உன்னை நீங்கா
வானம் நான் !!

என் எழுத்து பிழைகளை
ரசிக்க தொடங்கியலிருந்து
கிடைத்தாள் எனக்கொரு
கவிதை காதலி 

தீர்த்து வைக்க முடியா
ஓர் இரவு சண்டையில்
ஒரு முத்தம் போதுமாய் இருக்கிறது
உன் கோபம் தனிய ♥♥

உன் கை கோர்த்து நடக்க
ஓர் ஆளற்ற சாலையை 
தேடிக்கொண்டிருக்கிறது 
என் காதல் 

அல்ல அல்ல குறையாதது
அட்சையப் பாத்திரமென்றால்..
எழுத எழுத குறையாத
உன் அழகை என்ன சொல்ல..


சந்திக்க தாமதமான நாளொன்றில்
உனக்கு பிடித்த கோன் ஐஸ்க்ரீம் ஒன்றை
வாங்கி வந்து உன்னிடம் நீட்டினேன்
கோபத்தில் பொங்கி வழிந்தாய்
உருகிக்கொண்டிருந்த ஐஸ்க்ரீமை
நானே சுவைக்க தொடங்கிய சிறிது நேரத்தில்
உன்னிடம் எச்சில் ஊறி வழிவதை கண்டு
மீதி ஐஸ்க்ரீமை உன்னிடம் கொடுத்து
உதட்டோரம் வழியும் தேன் கலந்த
ஐஸ்க்ரீமை சுவைத்தேன்
அடடா அதுவல்லவா ஏழாவது சுவை..

எனக்கே தெரியாமல்
என்னை களவாட
பார்க்கிறது
உன் காதல் பார்வை 
எதற்கும் ஜாக்கிரதை..

உன்னை விட ஓர் அழகான
உலகம் எனக்கில்லை
உன்னோடு வாழ்ந்திட ஒரு
வாய்ப்பும் எனக்கில்லை
உனக்கே உனக்காய் வாழ்கிறேன்
யாரோ ஒருவரின் உலகில்
அகதியாய்...

தேவையின்றி எழுகிறது
உனது முன்கோபம்
தேடி எடுத்துக்கொள்கிறது
காதல்..
சிறு பிள்ளையாய் !!



உன் வீட்டிற்கு மட்டும் ஒரு
ஜன்னல் இல்லையென்றால்
ஒரு முழுநேர நிலவை
என் வானம் இழந்திருக்கும் !!


அம்மாவாசையில்
காகங்களுக்கு சோறூட்ட
மொட்டை மாடியில்
கா காவென்று காகங்களை
அழைத்து கொண்டிருந்தாய்..
எனக்கென்ன அம்மாவாசை?
என்னிலவு தான் வந்துவிட்டதேயென
உன்னை பார்த்து கொண்டே
சாப்பிட்டு முடித்தேன் !!

# நிலா சோறு #

விடியலில் வாசல் நனைத்து
காத்திருக்கிறது மழை
நீ கோலமிட..

சேர்ந்து விட்ட
இதழ் முத்தத்தில்
தனித்தே நிற்கின்றன
காதலும் காமமும் !!

அவ்வளவு அழகாடா நான்
எனக் கேட்கும் முன்
ஒன்றை நினைவில் கொள்ள
மறந்து போனாயடி நீ.
உன் பேரழகிலிருந்து தான்
அழகென்ற சொல்லே
பிரிந்தது என்பதை..!!

தலை மாட்டில் உட்கார்ந்து
தலை கோதி விடுகையில்
தாய்க்கு பின் தாரமல்ல
நீ இன்னொரு
தாயாகவேயாகின்றாய்..!!

யாரோ சொன்னார்கள் தேவதைகள்
பூமியில் பிறப்பதுன்டென்று..
உன்மை தான் போலும்
உன்னை பார்க்க கொடுத்து வைத்துள்ளதே !!

மறு பரிசீலனை என்பது
இழந்த காதலில்
இருப்பதில்லை..
மாற்றம் தேடி அலையும்
மனதுக்கு அறுதல்
கிடைப்பதில்லை..


முத்தம் தருகிறாள்
முகம்..

இடம் விட்டு தாவி
எட்டி பிடிக்கிறாள்
உதடுகள்..

கட்டி அணைக்க
விரட்டி பிடிக்கிறது
கை..

பழம் நழுவி
பாலில் விழுகிறது
நீ..

சுமக்க தெரியாத இதயத்திற்க்கு
சொல்லாமல் மறைத்த காதல்
சொல்லிக்கொடுத்து
சொல்லிக்கொண்டே அழுதது
உறவின் மேன்மையை
பிரிவின் கொடுமையை..

வேண்டியதை நினைத்துக்கொண்டு
அலகு குத்திக்கொண்டால்
வேண்டியது கிடைக்குமாம்
அழகி உன்னை நினைத்துக்கொண்டு
இதயத்தில் கை வைக்கிறேன்
நீ தான் வேண்டுமென்று துடிக்கிறது..!!

தங்க மீன்கள் தான்
உலகிலே அழகாம்..
உன் கண்களை காணாதவர்கள்
பேசிக்கொண்டார்கள்..!!


முகில் மூடிய
இரவு வானில்
முகம் காட்டி
விழிக்கிறது
நிலா..

காதலொரு தொற்று நோயாகிட
தினம் தினம் பிராத்திக்கிறேன்
என் காதல்
அப்படியாவது உனக்கும்
தொற்றிக்கொள்ளட்டுமே !!

நினைவுக்குள் வருவது
நீயாக இருக்கையில்
அலறி அடங்கும்
தவறிய அலைப்பேசி
அழைப்புகளை
சரி பார்க்காமல் சட்டென
டயல் செய்து விடுகிறேன் உனக்கு..

உன் வெட்கச் சிரிப்பால்
பூத்து நிற்கின்றன
அந்தி மல்லி
அதிகாலையில் !!

காதல் என் கை வசமாகுமோ
இல்லை காதலிடம் கைதி ஆவேனோ
காதலி நீ சொல்வாயோ..

அப்படி பார்க்காதே வெட்க
வெட்கமாய் வருகிறதென்று
கண்களை பொத்திக்கொண்டு
நீ மட்டும்..
அரை கண்ணால் பார்ப்பது
முறையா..

என் ஸ்பரிசம் தேடி
நீ மடியமர்கையில்
காதலொரு
குழந்தையாகிவிடுகிறது !!


விழிகளுக்குள்
விதை விதைத்து
காதல் வளர்கிறாய்
என்னுள் நீ...


நிலவு சொன்னது,
உனக்கு சோறூட்ட
ஆளில்லையாம்
தரையிறங்கி
வரட்டுமாயென்று..

நிலவை காட்டி
ஊரார் பிள்ளைக்கு தான்
சோரூட்டுவார்கள்

உனக்கு காதல்
ஊட்ட வேண்டுமென்று
சொல்லிவிட்டேன்..

வைரம் வைடூரியமெல்லாம்
பூமிக்குள் தானே கிடைக்கும்
அரிய பொக்கிஷம்
நீ மட்டும் எப்படியோ
பூமிக்கு மேல் !!



விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள்
விண்ணை சுற்றுவது போல் தான்
என் காதல் இயற்க்கைகோளும்
உன்னையே சுற்றி சுற்றி வருகிறது !!



சருகலான பாதையென
எழுதிவையுங்கள்
அவள் உதிர்த்துப்போன வெட்கம் 
வழியெல்லாம் சிந்திக்கிடக்கிறது !!

ஆயிரம் தான் சொல்
உன் அழகிற்கு ஈடாகாது
அந்த ஆயிரத்தில் ஒன்றும் 

தேடலில் கிடைக்காத காதல்
தேடி வந்து தொலைந்துப்போன
என்னிடம் தொலைகிறது !!

துணை


தொலைந்து விடு
என்னுள்..
என்னினைவுகளை
அனுப்பி வைக்கிறேன்
துணைக்கு..

என்னழகு நிலா

தொடும் தூரத்தில் தான்
என்னழகு நிலா..
அவளை சூழ்ந்து நானும்..!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive