என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

பிரம்மனால் மட்டுமே வரையப்பட்டவள் நீ



இது வரை வரைந்த
எந்த ஒரு ஓவியமும்
உன்னை போல் அல்லாதது
உன் தனித்துவத்தையே காட்டுகிறது..!
-
#பிரம்மனால் மட்டுமே வரையப்பட்டவள் நீ

உணர்வு - உறவு ?



காதல் உணரும் வரை 
அது வெறும் ஒரு உறவே !!

அவசர முத்தம்:



அலுவலகம் கிளம்பும் நேரம்
அவளின் அவசர முத்தம்
என்றும் காத்திருக்கும்
கதவின் ஓரம்.. எனக்காக..!

பரிசு:



சுடச் சுட தேநீருடன்
அவளின் அன்பு முத்தத்தையும்
பரிசளித்து விடுகிறாள்
காலை துயில் கலைகையில்..!

காமக் கடவுளின்
காதல் குழந்தைகள் நாம் !

வட்டி:



நிலுவையில் உள்ள
கடன்களை இப்போதே
நிவர்த்தி செய்துவிடடி
வட்டிக்கு வட்டி என
கோடியை தாண்டி விட்டது
எனது முத்தங்கள்..!

ஆசை:



இந்த ஜென்மம்மல்லாது
இன்னும் 7 ஜென்மம் கேட்டுக்கும்
எனது ஆசைகள் மட்டும்
உன்னோடு வாழ..!

இல்லத்தரசி



அந்தி மாலை நேரமொன்றின்
அவனுக்கான நெடுநேர காத்திருப்பில்
பழகி போன தனிமைக்  கண்டு
என்னோடு வாடி போனது..
என்னவன் வாங்கித்தந்த மல்லிகை பூ..!!

பாத சுவடு:



வரிசை கட்டி வந்த
எறும்பு கூட்டமெல்லாம்
வட்டமிடுகின்றது..
நீ வரைந்து சென்ற
கோலத்தை சுற்றியுள்ள
உன் பாத சுவடுகளை..!!

திருடி :



கரு கருவென கூடிய வானம்
ஒரு நாள் கதறி கதறி அழுததாம்
தன் வானவில்லை காணாமல்
பாவமடி இவ்வானம்
அது தான் இரண்டாக உடைந்து
உன்னிடம் உள்ளதே ..!

எப்படி?



நேற்றுவரை
எனக்கெதிராக
வீசிய காற்று
உன்னோடு
பயணிக்கையில்
என் திசையில்
வீசியது எப்படி ?

துணை



இரவுக்கு வெளிச்சம்
தந்தது நிலவு
என் தனிமைக்கு
துணை வந்தது
உன் நினைவு..!!

காதலால்:



உனக்கும் எனக்கும்
இடைப்பட்ட தூரத்தை
அளந்து வைத்தேன்
காதலால்..!!

நட்பு



உறவு முறைகளெல்லாம்
எனை பெயரிட்டு அழைக்கையில் !
நண்பா என புதிய பெயரிட்டு
அழைத்த முதல் உறவு நீ தானே !
பெற்றோர்கள் என்னை தன் தோளில்
சுமந்தார்கள் என்றால்..
என் தோளில் கை போட்டு நடந்த
முதல் உறவு நீ தானே !
கண்கலங்கி நிற்கையில்
தூசி விழுந்ததெனக் கூற
கேட்டுக் கொண்டு தாயுமிருப்பாள்
சொல்லு மச்சி என்னாச்சு என்று
வினவாத நண்பன் இல்லை !
அந்த பிகர பாரு மச்சி
என்பவனும் நண்பனே !
அந்தப் பெண் உனக்கு வேண்டாம் டா
என்பவனும் அவனே !
கஷ்டமென்ற வார்த்தை இல்லை
எனது அகராதியில்..
சந்தோஷமென்ற மறு பெயரில்
நண்பா நீ இருக்கையில் !
எனக்காக பஸ் ஸ்டாண்டில்
காத்திருப்பாய்..
சமயத்தில் பஸ்ஸையே
காத்திருக்க வைத்திருகிறாய் !
எனக்கு பிடித்தமான பாடல் ஒன்றை
வானொலியில் அற்பனிப்பாய் !
சக நண்பர்களோடு கேலியும்
கிண்டலும் செய்த பின்
தனிமையில் அமர்கையில் அதை
சொல்லி சொல்லி சிரிப்பாய் !
உயிர் நண்பன் யார் , எப்படி இருப்பார்கள்
என்று நான் கண்டதில்லை..
ஏனோ நான் உயிரையும் , உன்னையும்
பிரித்து பார்த்ததில்லை !
உன்னை பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகள்
ஏதும் இல்லை இனி..
தொடரட்டும் உன் நட்பு முடிவில்லாமல்..
என் கவிதையிலும்.....

Romance-2



முதன்முறை என் இரு கைகளையும்
கன்னத்தில் கட்டிக்கொண்டு
நீண்ட நாள் அசை ஒன்று நிறைவேறியதை
போல் உணர்கிறேன் டா..
என்ன வேண்டும் கேள் என்றாள்..
என் கைகள் கட்டி அணைத்த இடத்தை 
உதடுகளும் தொட துடிக்கிறது என்றேன்..
பச் பச் பச்சென முகம் 
நனைந்தது முத்தத்தில்..!

Romance-1


ஒரு விடுமுறை நாளில்
சமயலறையில் அவள்
சமைத்து கொண்டிருக்க
சல்லாப செயல்களில் ஈடு படும்
எனது இரு கைகளில் ஒன்றை
கவ்வி கொண்டாள்..
திமிறி தீண்டலில் ஈடு பட
முரடா என செல்லமாக திட்டும்
அவளது உதட்டை ஈர படுத்திய..
எனது உதட்டை உளற விடுகின்றேன்
மடிப்பில்லா அவளின்
அனல் பறக்கும் இடுப்பில்..!!

ஞாபகம்



கேட்காத தூரம் நீ  சென்றாலும் 
பார்க்காத உலகம் நீ போனாலும் 
அழியாத என் ஞாபகங்கள்.. நிழலென       
என்றும் உன்னை பின்தொடரும்..!

பொறமை



நிலவை பார்த்து பொறமை கொண்ட
நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம்..
நிஜத்தில் இப்பூமியில் உன்னை பார்த்து
ஏக்கம் கொண்டவர்களை ?
அப்படி உன் அழகில் எல்லோரையும்
பொறமை பட வைத்தவள் நீ..!

Missed Kisses



எச்சில் ஈரம் பட்ட முத்தத்தை மட்டும்
எண்ணி வைத்திருகிறாய் நீ..
என்னுள்ளே ஈரம் படாமல்
காய்ந்து போனவை எண்ணிலடங்காதவை..!

Like it



ஆண்டவன் படைப்பில்
அனைத்தையுமே ரசிக்க வேண்டும்
என்று நீ சொல்கின்ற போது ..
எல்லாமே மறந்து..
உன்னை ரசிக்க வைக்கிறாய் நீ ..!

U r mine



நீ எனக்கு மட்டும் தான் டா ..
என்ற போது புரிந்து கொண்டேன்
என் மீதான உன் காதலை !

பிறப்பிடம் நீ :


அனைவராலும் ரசிக்க படும் 
என்னுடைய எல்லா கவிதைகளுக்கும்
பிறப்பிடம் நீயாகவே இருகிறாய்..!

எல்லாம்



உன் முகம் பார்த்து மலர்ந்த காதலுக்கும்
உன் முகம் துளைத்து தேடும் தேடுதலுக்கும்
இடையில்...ஒளிந்திருகின்றன
என் ஆசை, ஏக்கம், சோகம், அன்பு, பாசம் எல்லாம்..!!



சிறிது நேரம் வந்து
போகும் உன் சிரிப்பால்
சிறை செய்ய படுகிறேன் 
ஆயுளுக்கும்  நான்..!

கலவி-முடிந்து :


கலவி முடிந்து காலை எழுகையில்
தினமும் அவளும் இரவை 
பழித்து கொண்டு தான் இருக்கிறாள்
அதுவும் கேட்க்காமல் 
விடிந்து கொண்டு தான் இருக்கிறது..!

நிறைவேறாமல்


விழி மூடாமல் காத்திருக்கிறேன்
வழி மாறி போகாதே  அன்பே
உனக்கான காத்திருப்பும்
எனக்கான எதிர்பார்ப்பும்
நிறைவேறாமலே போகின்றன..!!


கலங்கிய கண்களோடு
என் கண் முன்னே நிற்காதே
இரு கரங்களே உள்ளன என்னிடம்
இதில் யார் கண்களை முதலில் துடைக்க ?

துயரம்:


எனக்காக நீ அழுததும்
உனக்காக நான் துடித்தும்
இந்த ஜென்மத்தின் துயர நிகழ்வு..!!

வதம்




உன் குரும்செய்திகளை சுமக்க எண்ணி
தன்னிடத்தில் உள்ள குரும்செய்திகள்
ஒவ்வொன்றாக வதம் செய்யப்படுகின்றன..!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers