என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!



நீரில் மிதந்து வரும் காகித ஓடமாய்
மூழ்கடிக்க படுவேன் சற்று நேரத்தில்
இதிலும் நீ பயணிக்க வேண்டுமானால்
நானிருக்கிறேன் உன்னை சுமப்பதில்
சுமையேதுமில்லை சுகமே..



மௌனமாய் கடந்து விடுகிறாய்
நான் நிற்பதை பார்த்தும்..
கிறுக்கனாகவே கிடந்து தவிக்கிறேன்
உன்னை பார்த்த பூரிப்பில்..



ஆளற்ற சாலையில்
கை கோர்தவாறே
நடக்க தொடங்கிய பின்..
மனதை அலைப்பாய விட்டு
இறுக பற்றிக்கொள்கிறது
காதல் நம்மை.. ♥ ♥



கலர் கலராய் புடவைகளை காண்பித்து
எதை கட்டிக்கொள்ள என்கிறாய்..
உன்னையே சுற்றி வரும்
என்னை கட்டிக்கொள்ளேன்.. ;-)



உனக்காக தான் எனத்தெரிந்தும்
நன்றி சொல்லி
என் ஒவ்வொரு செயலையும்
பாராட்டுகிறாய்..
நன்றி பாராமல் செய்யும்
இக்காதலை மட்டும்
பார்காததை போலவே
போவதேனோ..



என்னில் முளைத்த காதலுக்கு மட்டும்
உன்னிடத்தில் வேர் இருப்பதால்
நீரூற்றி வளர்க்கமுடியாமல்
கிளையெல்லாம் தழையின்றி
பட்ட மரமாய் நிற்கிறது..



இரவின் வானில்
அழகாய் இருப்பது நிலவு..
இரவின் அழகை கடத்தி
நிலவாய் இருப்பவள் நீ !!



எரியும் அகல் விளக்கின்
திரிநுனி சுடரில்
பிரகாசமாய் ஒளி வீசுகிறது
பளிச்சிடும் உன் முகம்!!

திமிராய் ஒரு முத்தம்



ஹம்ம் நீ தானே அது என
எனது ஒவ்வொரு தவறையும்
கண்டுபிடிக்கையில்..
தண்டனையாய் நீ,
தர மறப்பதில்லை
திமிராய் ஒரு முத்தம்..



துள்ளி தெறிக்கும் நீரில்
பாதம் கழுவும் பாவையே..
பாவ விமோச்சனமா நீருக்கு நீ தருவது ?
பாவம்! மோட்சம் பெற்றும்
பாதகம் இழைகிறாய்..
உன் பாதக்கொலுசினை தொட்டு
வணங்கிட முடியாமல்..!!



ஏழு மலை
ஏழு கடல் தாண்டி
உன் இதயத்தை
நீ மறைத்து வைத்தாலும்
எளிதில் கண்டுவிடும் என் காதல்..

 
 
தலை குளித்து முடித்ததும்
நீ கூந்தலை பின்னளிடாமல்
ஊஞ்சலாடும் அழகை
எந்த கவிஞனேனும் பார்த்துவிட்டு
பெண் மயில் தோகை விரிக்குமென
எழுதினாலும் ஆச்சரிய பட இல்லை..



காற்றுக்கு வேலி கட்டுகிறாய்
தாவணியால் உன் முகம் மறைத்து..
என் சுவாசம் நின்றது தெரியாமல்

 
 
எனக்கும் உனக்குமிடையில்
என்ன இருக்கிறது அப்படி
என்று கேட்ட  நண்பர்களிடம்..
எனக்காக நீயிருக்கிறாய்
எனக்கூறிவிட்டு வந்திருக்கிறேன்..!!

தற்செயலான விடைப்பெருதளிலே தான்
தெரிய வைப்பாய் நீ..
என் மீதான உன் காதலை <3 <3



உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥


பசிக்கு அழும் குழந்தையிடம்
பால் பாட்டிலையும் கொடுத்து
அதை வெடுக்கென்று பிடுங்கி
கொண்டதைப் போலிருக்கிரதடி
உன் அன்பை கொடுத்து
நீயே அதை பிடுங்கி கொண்டது..


உனக்கு என்றால் மட்டும்
என் தேடல் யாவும்
நிகரில்லாததாக தான் இருக்கும்..


பெரும்பாலும் ஹ்ம்ம் என்ற
பதிலையே எதிர்பார்கிறேன்
என் எல்லா கேள்விக்கும்
அப்படியே இந்த முத்தத்திற்கும்..

ஒரு மழை துளியென்றாலும்
அதில் உன்னோடு
நனைந்திட வேண்டுகிறேன்..

பார்கின்ற பூவையெல்லாம்
உன் கூந்தலில் சூடிட
எண்ணுகிறேன்..

உன் கொலுசின் ஓசையை
புல்லாங்குழல் கொண்டு
அடைக்க துடிக்கிறேன்..

கடிகார முல்லை
கையில் பிடித்து கொள்ள
நினைக்கிறன்..

தூக்கத்தை தின்னும்
உன் கனவுக்காக
காத்துகிடக்கிறேன்.

ஒத்தையில் வாடினாலும்
ஒருதலையாய் உன்னை
காதலித்திட வேண்டும்..


உன்னை தொடாத தூறலும்
தொட துடிக்கும் மேகமும்
வானிலிருந்து தரையிறங்கியும்
தரையிலிருந்து வானையடைந்தும்
முடியாமல் கடலோடு கலந்துவிடுகிறது
மீண்டும் முயற்சிக்க...


விருப்பம் ஒன்று வரும்போது
வேண்டுதல் இருக்கும்..
ஆம் உன்னை விரும்ப
வேண்டுதல் ஒன்றை
உன்னிடம் வைக்கிறேன்..


சொன்னால் கேளென்று
ஆணையிடும் அவளுக்கு
சொன்னால் மட்டும்
 புரிந்து விடுமா என்ன
என் காதல் ??


நீயே சொல்லிவிட்டாய்..
இனி நானென்ன சொல்ல ?
எனக்கு பிடித்த காதலை விட
உனக்கு பிடித்த பிரிவையே
நானும் இனி நேசிக்க
பழகிக்கொள்கிறேன் <3


தொட்டில் குழந்தைக்கு
ஆரிராரோ பாட்டு பாடுவதை போல்..
ஆறுதல் பாட்டு படிக்கிறேன்..
நீ அழ(விட்டு)வைத்து சென்ற
நம் காதலுக்கு <3

எதை தாங்கும் வலிமையையும்
நான் பெற்றாகிற்று..
அதனாலே உன் நினைவுகளை
சுமையென்றென்னாமல்
சுமந்தலைகிறேன்..

முகம் சுழித்து பழித்து
காண்பிக்கிறாய்..
நீ சிரிக்க நான் செய்த  
என் கிறுக்குத்தனத்துக்காக..

உன் பெயரில் வரும் வாக்கியங்களை
தற்செயலாய் படிக்க நேர்ந்தால் கூட
தடம் புரளும் ரயிலாய்
தடுமாறி விடுகிறேன் ஒரு கணம்.



நீ ஒன்றும் சொல்ல
வேண்டியதில்லை..
எனக்கென இருக்கின்றது
உன் மௌனமென்னும் பதில்..

உண்மையை சொல்லுடா
என்ற உன் அதட்டல் பேச்சுக்கு..
உன்மை சொன்னால் கூட
ஏண்டா பொய் சொல்ற என்ற
அந்த அதட்டல் பேச்சை கேட்கவே
முதன்முறை பொய்யுரைக்கிறேன்..♥


ஊருக்குள் தலை நிமிர்ந்து
நடக்கும் என்னை..
தலை குனிந்து நடக்க வைக்கிறது..
உன்னை எதிரில் பார்க்கையில்
இக்காதலின் வெட்க்கம்..


தனியேயான வெளியூர்
பயணங்களின் போது
உடல் மட்டும் என்னுடன் ..
நினைவெல்லாம் பின்னோக்கி செல்லும்
மரங்களோடு என் மனம்
என்னவோ உன்னுடன் தான்..

யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..


காயம் பட்டால்
அலறிக்கொண்டு
மருந்திட ஓடிவரும்
அம்மாவும் அறிந்திட
முடியாத...
காயம் தந்ததால்
ஆறாமலே இருக்கிறது
காதலின் பெருங்காயம்.. </3


நான் தொலைத்த நாழிகை
முழுதும் உனக்காக தான்
என என்னும் போது..
கடிகார ஓசை ஒலித்தது
உண்மையென..


காதலுக்கு நிறம் பெரிதல்ல
என்பதை நினைவூட்டவே
கருமேகம் கரைந்து
பூமியிடம் வருகிறது
மழையாக...

யாரையோ நம்பி
உன் மனதை தருகிறாய்.
என்னையே உனக்காக
இழக்கிறேன் என்கிறேன்
தர மறுக்கிறாய்..



சோறு கண்டயிடமே சொர்கமென்று
உன் நினைவை தினம் உண்டு
நரகமென்னும் சொர்க்கத்தில்
வாழ்கிறேன் நான்..
தாராளமாய் அன்னமிட்டு
செல்கிறாய் நீயும்..
சொர்கத்தை காட்டி !

நீ தாவணியை எடுத்து
தலையில் போட்டுக்கொண்டு
தெருவில் நடந்து வந்தால்..
வானிலவுக்கு யாரோ
குடை பிடிப்பதை போலவே
உணர்கிறேன்..

ஆயிரம் கவிதை
சொல்லி போகும்
உன் கண்கள்
அதில் ஒன்று தான்
இது..


நேற்றுவரை ஒன்றும்
பிடிக்காமல் தான் இருந்தேன்..
நேற்றே உன்னை பிடித்துப்போய்..
நேற்று முதல் உன்னிடமிருந்து
ஒவ்வொன்றாய் ரசிக்க தொடங்கி
முதலில் விரல் பிடித்து நகம் கடிக்க
தொடங்கி இருக்கிறேன்..!

மழைக்கு முந்தைய நிமிடம் வரை
அமைதியாய் கருமை சூழ்ந்த வானத்தை
வெறிக்க பார்தமர்ந்திருந்தாய்..
ஒரு துளி தரையில் விழுந்ததும்
சிறு பிள்ளையாய்..
மறு துளிகள் அனைத்தையும்
பிடித்து கொள்ள கையை நீட்டினாய்
மழையோ உன்மேலுள்ள ஆசையில்
உன்னை மொத்தமாக நனைத்து சென்றது.!!


முந்தித்தள்ளி முதலாளாய்
வந்துவிடுகிறாய் சிந்தையில் நீ..
பாவம் என் வாழ்க்கை கனவெல்லாம்
புறம் தள்ளி வீழ்ந்துக்கிடக்கின்றன..
பலிக்காத ஒன்றாய்..


Aazh Kulathill Kallerinthu Amarnthirukkiren..
Alai Alaiyaai Vanthu Vattamittu
Mothi Selkindrana Un ninaivugal..
Ondru kooda aaruthalukaai
Ennudan nindruviduvathillai..
Ellam Erintha kallai nokki than adangi pokindrana..
Adangathaa un ninaivai pol..!!

தெப்பகுலத்தில் நீராடி
வெப்பமாக்கி போகிறாய் என்னை..
அணை(னை)க்க ஆளின்றி
உஷ்ணமாகி கிடக்கிறது
உச்சந்தலை..

சொன்னால் கேளுடா !
எத்தனை முறை நீ
இதை சொன்னாலும்..
உனதிந்த கெஞ்சலுக்காகவே
கேட்காமல் அடம்பிடிக்கிறது
எனதாசை...!!

கந்து வட்டியில் உன்னன்பை
கடனாக பெற்று..
வட்டியை தரமுடியாமல்
என்னை உன்னில் இழந்தமைக்கு
பெயர் காதல்..

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற
வாசகத்தை படிக்கலானேன்..
நாமொன்று வளர்க்கலாமென்று
வீட்டிற்க்கு வந்து பார்த்ததில்
வீதி வரை பூத்திருந்தது
உனக்காக வளர்க்க பட்ட பூச்செடிகள் !!

கண்ணை கட்டி காட்டில் விட்ட
அனுபவத்தை தந்து விட்டு
போனது உனது இருவிழி பார்வை
திசை அறியாமலே திக்குமுக்காடுகிறேன்..!!

நினைக்கும் போது மட்டுமல்ல
நீ வெறுக்கும் போது கூட
நானே முதலிடம்..

உறக்கமில்லா என் இரவுகளை
இருக்கமாக போர்த்திகொள்கின்றன
உன் நினைவுகள் இதமாக..

உனக்காய் மலர்ந்த பூக்கள்
உனக்கில்லாததால் தான்..
உதிர்ந்து விடுகின்றன
யாருக்குமில்லாமல்..!!

விருப்பமின்றி என்னை
விரும்பி தொலைத்தற்க்கு ..
எப்போதும் அனல் பார்வையால்
வெறுப்பை உமிழ்ந்து செல்கிறாய் நீ !!

எப்போது உன்னை பார்த்தாலும்
முதன்முறை பார்ப்பதை போலவே
பிரம்மிக்க வைக்கிறது
இந்த காதல் ♥

அளவுக்கு மீறினால் அமுதமும் ..
நஞ்சென்று யார் சொன்னது ?
அத்துமீரலுக்கு பிறகு தானே
அடுத்த முத்தத்தை தர
சம்மதிக்கிறாய் நீ..!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive