என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!

வெட்கமோ??


பூக்களுக்கும்
வெட்கமோ???
தன் காதலை
வெளிபடுத்த
வண்டுகளை
       தூதுவிடுகிறதே ...!!

நினைவுகளாக நீ






நினைவுகளாக நீ
என்னுடன் எப்போதும்
உறவுகளாக நம்
காதல் நம்முடன்
நான் மட்டும் அழ்ந்த
சிந்தனையில்...
நம் உரையாடல்
எப்போதென்று

விடிந்த நாட்கள்
இருலாமல் போக...
இருண்ட இரவுகள்
விடியாமல் தொடர...
என் உலகம் மட்டும்
இயற்கைக்கு புறம்பாக
சுற்றுதே..!!

கிராமத்து காதல்

மழை விடுத்த பின்
லேசான தூரலில்
கைகோர்த்து நடந்த
ஈரமான சாலை

சில்லென்று ஓடும்
சிறிய மனரோடையில்
உன் பாத சுவடுகளில்
என் பாதத்தை மெல்ல
மெல்ல அழியாமல்
பதித்து நடந்த நாட்கள்

தவறென்று தெரிந்தும்
உன் பாதத்தை தொட
முந்தியடித்து என்
கால்கள் நடக்க....

ஊர் வந்து விட்டதென்று
நீ ஒதுங்கி நடக்க...

ஒடுங்கி தான் போகிறது
என் மனம்
நாம் நடந்து வந்த
பாதையை எல்லாம்
பார்த்து கொண்டே..!!!

ஏனடி??

விழித்த நாழிகை முதல்
விழி மூடும் வரை
உன் நினைவுகளிலே
கழிந்து விடுகின்றதே
.
.
ஏனடி??

இது மட்டுமா ???

கண்ணுறங்க போனால்
களைந்து போகும் கனவிலும்
உன் நினைவுகள்
கண் விழிக்கும் வரை
.
.
ஏனடி??

கவிஞர்கள் பஞ்சம்



பூமியில் உள்ள
கவிஞர்கள் எல்லாம்
போதுமா என்றால்??
இல்லை என்றே
சொல்வேன்
உன்னை வர்ணிக்க...!!!

துரோகம்


ஹே பூவே நீயும்
எனக்கு துரோகம்
செய்து விட்டாயே...
என் காதலுக்கு தூது
சென்ற நீயும் மயங்கி
விட்டாயே ???
....அவளின் கூந்தலில் !!!

காற்றுக்கும் பொறாமை தான்





 காற்றில் மேல் காதல்
கொண்டு அசைந்தாடும்
ஒற்றை முடியை தூக்கி
நிறுத்துகிறாள் அவள்...
அடங்கி போகத்தான்
செய்கிறது சிறிது நேரம்
அவள் விரல் தீண்டிய
மயக்கத்தில்...!!



மொட்டை
மாடியில்
போய்
உலாவாதே
அன்பே..!!
வான்
நடச்திரமெல்லாம்
நிலவென்று
எண்ணி
உன்னை
மொய்க்க
போகிறது..!!







வள்ளுவன் தொடுக்காத
இரு வரி குறள்கள்
உனது இரு புருவங்களும்
இதழ்களும்...
அர்த்தங்கள் ஆயிரம் அவைகளை
ஆராய எத்தனிக்கையில்..!!!


பூக்களும்
பூக்க
மறுக்கும்
என்
நந்தவனத்தில்
உன்
கடைக்கண்
பார்வை
உதிக்காமல்
போனால்

பாக்கியசாலி...





எவரேனும் நிலவை
கண்டதுண்டோ
அம்மாவசை அன்று ??
நான் மட்டும்
பாக்கியசாலி போல
என்ன பாக்கியம்
செய்தேனோ
முழு மதியாய்
என்னவளின் தரிசனம்
கிடைக்க..!!

மக்களின் சோகம்

வியர்வை சிந்தி
உடம்பை வளைத்து
வேலைபார்ப்பவன்
உழைப்பாளி..!!
வெயிலில் கூட தலை
காட்டாதவன் தலைவன்..!!
கூறு போட்டு விற்கிறான்
என் நாட்டை...
ஒட்டு போட்டு ஏத்தி
விட்ட பாவத்திற்காக..!!
ஓடி ஓடி உழைக்கும்
என் மக்களுக்கில்லை
சோறு..!!
உக்காந்து கொண்டே
இருபதற்கு..உனக்கு
கூட்டி கழித்தால்
1.5 லட்சம் மாத சம்பளம் !!
இருக்கின்ற கஷ்டத்தை
போக்க ஒட்டுக்கு பணம்
பெறுகிறான்..!!
ஹ்ம்ம்ம் அரியாசனம்
ஏறியவுடன் அத்தனையும்
பிடிங்கி கொள்கிறான்..!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உனக்கெங்கே தெரிய போகிறது
மக்களின் வலியும் கண்ணீரும்,
பணம் படைத்தவன் மனமாய் வாங்குகிறான்..
மனம் படித்தவை என்ன செய்வான்...
உனது லட்ச ஊதியத்தில்
விலைவாசி எல்லாம் தூசி தானேட...

லட்ச ஊதியத்தை உதறி,
லட்சத்தில் ஒருவனாய்
நீயும் வாழ்ந்து பாரடா
அப்பொழுது தெரியும்
உனது வாழ்க்கையின் லட்சணம்
எனது மக்களின் சோகமும்...

தேவதாஸ்

வி(டை)டு(பெற்ற) பட்ட என்
காதலில்...
விடாமல் அவள்
நினைவுகள்...
தொடராமல் என்
பயணம்...
தூங்காத என்
இரவுகள்
மிச்சமாய் அவள்
பேச்சுக்கள்
மீதமாய் மறுத்து போன
என் மௌனங்கள்
சொந்தமென்று
சொல்லிக்கொள்ள
என் நாயும்
சொத்தென்று
சொல்லிக்கொள்ள
நீ அன்போடு அழைத்த
"தேவதாஸ்"
என்ற என் பெயர்
மட்டும் தானடி
என்னிடம் உள்ளது..!!

கலங்கரை விளக்கம்

பாற்கடலில் நீந்துகிறான்
பாய்மர படகில்...
பூமியில் உள்ள
ஜீவன்கள் ருசிபதற்காக!!
கடல் வளத்தை பிடித்து
காசக்குகிறான் மீனவன்
உனக்கெங்கேயடா
தெரியபோகிறது... நீ
சென்ற பின் உன் குடும்பத்தின்
தவிப்பு.. நீ வரும் வரையில்
காத்துகொண்டிருப்பது உன்
குடும்பம் மட்டுமல்ல
உனது வருகைக்காக
ஒத்தையில் தனியே
நின்று கொண்டிருக்கும்
நானும் தான்...!!!

அற்ப்பமாய் காதலித்து விடுவேன்

உனக்காக ரோஜாவை பறிக்கும்
போது கூட என்னை
தீண்டவில்லை அதன் முள்
நீ வேண்டாமென்று
கசக்கி தூக்கி எறியும்
போது தான் குத்திவிட்டது
எனது நெஞ்சில்
நீ என்னை விட்டு
விலகுவதாயின் முதலில்
உன் விழிகளையும் ,
என்னை சுற்றியே
வீசும் உன் சுவாசத்தையும் ,
என்னை தீண்டாமல்
பார்த்துக்கொள் பெண்ணே
இல்லையேல் மீண்டும்
அற்ப்பமாய் காதலித்து
விடுவேன் நீ விட்டு
செல்லும் அறிய
பொக்கிஷங்களை...!!

Hikooo





பூமியில் தேவதைகள்
பிறப்பது அரிது
உன்னை கண்ட
பிறகே உணர்ந்தேனடி..!!

கற்பனையில் மட்டும் தான் அழகு




காதல் என்பதை யார்
வேண்டுமானாலும்
கற்பனை செய்யமுடியும்
ஆனால் அது
கற்பனையில் மட்டும் தான்
அழகு என்பதை யார்
உணர்கின்றனர்.....???

வலி






துடிக்கத்தானடி தெரியும்
என் இதயத்திற்கு
பேச மட்டும் தெரிந்தால்
சொல்லிவிடும்
உன்னை சுமப்பதனால்
எவ்வளவு வலி என்று....!!!

கனவு தேவதை

என் மனசளவில் தோன்றிய
சோகத்தையெல்லாம்
உன் மடி சாய்ந்து
தொலைத்தேன்..!!
நீ என் கண்ணோரம் வழிந்த
கண்ணீரை எல்லாம்
உன் கரம் கொண்டு
துடைத்தாய்..!!
விழித்து எழுந்தால்
ஒன்றும் நினைவில்
இல்லை..!!

 தினமும் தூங்க செல்கையில்
எனக்கு பிடித்த 
கடவுளின் பெயரை
தான் நினைத்துகொள்வேன்
இப்போதெல்லாம் 
தூங்க செல்கையில்
உன் பெயரை தான் 
நினைத்துகொள்கிறேன்
உன் நினைவுகளை
போர்த்திக்கொண்டு தான் 
தூங்குகிறேன்...!!

இயலாத ஒன்று...




ஒரு நாளில் ஒரு
முறையாவது
என்னிடம் பேசிவிடு...
இல்லை என்றால்
உன் நினைவுகளுக்கு
என்னால் ஓய்வு தருவது
என்பது இயலாத ஒன்று...

பாசம்



அடியே உன்னை காட்டிலும்
உன் நினைவுகளுக்கு தானடி
என் மீது பாசம் அதிகம்
என்னை ஒரு போதும் பிரிய
நினைத்ததே இல்லை..!!

நிழலின் துயரம்



என் நிழலுக்கும் கூட
துயர காலம் தான்..
எப்போதும் கருப்பு
உடை உடுத்தியே
வளம் வருகின்றது
உன்னை சேர
முடியாமல்..!!


பௌர்ணமி

விடியலை ஏற்க மறுக்கிறது
நிலவு...
உன்னை விட்டு பிரிய
மனமில்லாமல்....!!

தினம் தினம் தொய்வு பெறுகிறது
உன்னை நீண்ட நேரம்
காணமுடியாமல்...!!

அம்மாவசை

உயிர் விட்டது இன்று
தன் உயிரை காணமல்...!!

உனக்கான பதில்கள் என் மனதில் மட்டும்

வலிகள் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
---உன் மௌனமே..

பாசம் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
--நீ அருகில் இருக்கையில் அது எதற்கு..

ஸ்பரிசம் என்றால் என்னவென்று தெரியுமா என்றாய்
--உன் நெருக்கம் ...

கோபம் வருமா என்றாய்
--நமக்குள் இருக்கும் அந்த சிறு இடைவெளியின் மீது மட்டும்..

பிடித்த இடம் என்றால்
--உன் இதயம்..

பிடித்த ஓவியன் என்றால்
--உன்னை வரைந்த கடவுள் தான்..
.
.
.
.
இத்தனையும் கேட்கிறாயே முதலில் சொல்
என்னை உனக்கு பிடிக்குமா ??

ஓற்றுமை


எனக்கும் நிலவுக்கும்
ஒரு ஓற்றுமை உண்டு...!!
நானும் அவளை
காண்பதில்லை...
நிலவும் சூரியனை
சந்திப்பதில்லை...
இருவரும் முயற்சியை
மட்டும் விடுவதாக
இல்லை...!!

இன்னும் சில காலங்கள்






புதுசா பூத்த காதலே...
நீ மொட்டகவே இருந்துவிடு
இன்னும் சில காலங்கள்
இல்லையேல் உன் வாசம்
இவ்வுருக்கே தெரிந்து விடும்...
நான் மட்டும் முழுதாய்
சுவாசிக்க வேண்டும்..
"உன் வாசத்தை"
இன்னும் சில காலங்கள்..!!

மௌன புன்னகை



நீ கருமியாக இருக்க
கூடூமோ...??
சிரிப்பை கூட சேர்த்து
வைக்கிறாயே செல்லமே??
தாராளமாய் சிதற விடு,
சேமித்து வைக்க நான்
உள்ளேன்...!!
நீ சிந்தும் முத்துக்களை..!!

துடிகின்றது...

முகம் தேடி அலைந்தேன்
உன் முகவரி இல்லாமல்
தேடுவதற்கு நானோ
தொலைத்து விடவில்லை
புதைத்துவிட்டேன்....
என் இதயத்தில்
தினம் தினம் வேதனையில்
துடிகின்றது
உன்னை துடிக்க
வைக்கிறனே என்று
இன்று புரிந்தது
எனக்காக துடிக்கும்
இதயம் எதுவென்று

என்னை கொள்ள வேண்டும்
என்று நினைத்தால் வலி
இல்லாமல் கொன்று விடு அன்பே...
துடித்து விடும் உனக்காக துடிக்கும்
என் இதயம்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர் உலகிற்கு தானடி நீயும் நானும்
ஊமையாக பேசிக்கொள்கிறோம்
உண்மையில் நான் எப்போதோ வாழ
ஆரம்பித்து விட்டேன்
உன்னுடன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சூரியனும் நிலவும் போல நீயும் நானும்
பார்க்காமல் பேசாமல் உறவடிகொண்டு
இருகின்றோமே
உன் உறவோ உனது சொந்தங்களோடு...
உன் சொந்தமாக போகும் நான் அற்றேன்
உன்னிரவுகளை...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் இரு மனங்கள் நான்கு கண்கள்
சம்பந்த பட்டதென்று யார் சொன்னது??
இங்கு உனக்கும் சேர்த்து
நான் அல்லவா காதல் செய்கிறேன்...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னுலகம் நான் அறியேன் என்னுலகம்
நீ அறிவாய் புதுவுலகம் படைப்போம்
புதுமண தம்பதிகளாய் ...!!

நீ தான் என் காதலி

புதிதாய் பிறந்து தவழ்ந்தோடும்
குழந்தையடி நான்....
இந்த காதல் பிரபஞ்சத்திற்கு...
காதல் மொழியினை பேச
மொழிந்தவள் நீ...

இன்று நான் நடமாடும்
மொட்டை மாடி கூட
கத்தோடி போனதடி...
நம் உறவாடல் இல்லாமல்..

காதல் கவிஞ்னனை
உருவாக்குமாம்...

எனக்குலிருந்த கவிஞ்னனை
உணர்த்தியவள் நீ என்றால் ??
நீ தான் என் காதலி(ல்)..

நீ மௌனமாய் செல்லும்
ஒவ்வொரு தருணமும்
உன்னை அறியாமல் உனது
இதழ்கள் புன்னகைத்து
விட்டு தான் செல்கின்றன..

நீ சிரிக்காமல் சிதறவிடும்
அந்த சின்ன சிரிப்பில்
என் சின்ன மனசை
ஒரு செல்ல நாய் குட்டி
போல இழுத்து செல்கிறாயே..???

என்னை தொடரும் எனது
நிழல் கூட உந்தன் திசை
நோக்கி பின் தொடர
ஆரம்பித்து விட்டது பெண்ணே..

காரணம் தெரியாமல் குழம்பிபோனேன்

பின்பு தான் உணர்ந்தேன்
நிலவின் பிம்பம் கடல் மேல்
தான் மிக அழகாக பிரகாசிக்குமென்று...!!

வர முறைகள்





இயற்கைக்கும் சில
வர முறைகள் உண்டாம்
எனக்கும் மட்டும்
இல்லாது போனதேனோ ??

பகலெல்லாம் உன் நினைவிலும்
இரவெல்லாம் கனவிலுமாய்
கழிந்து விடுகிறதே..!!

முரண்





பிரிவால் வாடும்
என் இதயத்திற்கு
தெரியவில்லை..
பிரிவதால் மட்டுமே
தன்னால் துடிக்க
முடியுமென்று...!!

இல்லையேல் அதற்க்கு
ஏதடி உயிர் ???

பிரிவு(யமு)டன்

தனிமையின் உறவுக்காரன்

தனிமையுடன் குடில்
கொல்லவா நான்
பிறந்தேன் ??
நீ இருக்கையில்..

தனிமைலிருந்து என்னை
மீட்டெடுத்த தேவதை
அல்லவா நீ ??
மீண்டும் அதே இருட்டறைக்குள்
தள்ளிவிட்டாயே..!!

நீ குடிருக்கவேண்டிய
என் இதயகொவிலில்
தனிமை தாராளமாய்
ஆட்கொண்டுவிட்டதே..!!

இறைவனிடம் வரம்
வாங்கி வந்தவன்
போலும் நான்
தனிமை எனக்கே
சொந்தமென்று..!!

தாஜ்மஹால்




 

குடையுடன் நடந்து
வருகிறது ஒரு
தாஜ்மஹால்..!!

என்னவளின் கையில்
நேற்று பெய்த மழையில்
புதிதாய் பூத்த காளான்..!!

பாவையின் கனவு

கண்ணிமைக்கு தாழிட்டு
விட்டேன்....
இதய கதவை திறந்தே
வைத்துள்ளேன்
வண்ணமிகு கோலங்கள்
வரைந்து வைத்து
என் கண்ணாலனே
உனது வருகைக்காக...
என்னருகே வாடா என்று
கரம் பிடித்தாயே...
கனவுலகிருகா
காலடி வைத்தவுடேனே
மிதக்கிரனே சொர்கமா என்ன.....
சொக்கி போகிறேன்
உன் அரவணைப்பில்...

இத்தனையும் நீ சொல்லும்போது
நிஜமாக கூடாத என்று ஏக்கம்
கொல்லுதடி என் மனசு ..!!

மூடு பனி.....

மூடு பனி பொழிய
முழு நிலவொன்று
இன்று பூமியில் வந்ததோ ?

முகம் காண மறுக்கிறாயே
அம்மாவசையானது என் மனம்
அரைகுறையாய் உன் முகம்...

பார்த்ததும் பதிந்து விட்டதே ?
என் நெஞ்சில் உந்தன் முகம்
நானும் கூட ஓவியனோ ??
ரவிவர்மாவைபோல் ??

வரைந்தேரிவிட்டது எனதோவியம்
எனக்கு தெரிந்த தேவைதை
என்றால் அது நீதானடி..

தேவதையாய் உன்னை பார்த்தும்
கெஞ்சுகிறது என் இதயம்
உயிர் கொடுத்திட வேண்டி...

மனிதனால் முடியாதது ஏதுமில்லையென
முழுதாய் நம்பிவந்தேன் நான்.
முதல் முறை தவறிப்போனேன்.

ஓவியத்திற்கு உயிர் கொடுத்திட
காதல் வேண்டுமாம் - காதலுக்கு
நீ வேண்டுமடி அன்பே...

நித்தமும் காத்திருக்கிறேன்
காதல் வரம் வேண்டி...
காதல் தேவதையே உனக்காய்...

என்று நடக்கும் இவையெல்லாம் ???


என்று நிகழும்
நம் சந்திப்பு.....
என்று பேசிக்கொள்ளும்
நம் இதழ்கள் ...
என்று பார்ப்பேன்
உன் வெட்கத்தின் தலைகுனிவை....
என்று கட்டிகொல்வாய்
உன்னுடன் சேர்த்து என்னை....
என்று மாறும் என் தலையணையாக
உன் மடி .....
உணர்கிறேன்
கிடப்பில் போட்ட வேலைவாய்பிர்கான
என் சுயசரிதையை போல

சின்ன சின்ன செல்ல சீண்டல்கள்

வெட்கத்தில் நானி கட்டி
அணைத்தாயே தலையணையை
கண்மணி பொறாமை தான்
நான் இருக்க வேண்டிய
இடத்திலுள்ள இந்த
தலையணையின் மேல்........

தொட்டு தொட்டு உரசிட
ரொம்ப புடிக்குமோ உன்
மூக்கிற்கு?
நீ செய்யும் ஒரு
குறும் சேட்டையோ ??

இனிபொன்று வைக்க
மறந்தார்களோ ??
உன் இனிய இதழ்கள்
போதுமென்று எண்ணி

என் ரோமங்களுக்கும்
கூச்சம் உள்ளதடி
சிலிர்த்துக்கொண்டு
நிற்கிறதே எனது நெஞ்சக
முடிகள் உனது சீண்டலில்

நீ சரியான சில்மிஷகாரி தான்
இதயத்துடிப்பின் ஓசையை
கேள் என்று கூறி
நெஞ்சோடு அனைத்துகொன்டையே !!

நீ செய்யும் சிறு சிறு
சீண்டல்களைஎல்லாம் பார்க்கமுடியாமல்
அமிழ்ந்து விட்டது பார்
நாம் அறையின் விளக்குகளும்...!!!

பெண்மை.....!!

பால் சொம்பை சுமந்து
நடக்கையில்..
பருவ பெண் நானோ
முன் அறிய மறந்தேன்
நாணத்தை...
தோழிகள் அறையினுள்
தள்ளி தழிடுகையில்
எங்கிருந்து வந்தததோ ??
வெட்கம்... எனை தள்ளுதடா
உனது பாசங்கள் பின்னுக்கு
தள்ள முந்திகொல்கிறது காமம்
இந்த நாளு சுவருக்குள் மட்டும்..
சிவந்து போகிறேன் நான்
உனது சீண்டல்களின்
மிச்சத்தில்..!!

பரிமாறி போகிறது உனது முத்தம்....

எட்டி எட்டி பார்த்து கொண்டே
வெளி வர மறுப்பாள்
போர்வைக்குள் ஒளிந்து கொண்டு
விருப்பமில்லாதவள் போல் நடிப்பாள்
பார்க்க மாட்டாளாம் என் முகத்தை
பற்றிகொல்லுமோ... காமத்தீ
முதல் முத்தத்திற்கும்..
அனைபிர்க்கும் ஏக்கம் கொள்வாள்
பரிமாறி போகிறது உனது முத்தம்
பரிதவித்து போகிறேன் நான்..
ஹ்ம்ம் நீ கொஞ்சும்
தங்க சங்கிலியாகவே
இருந்து விடலாம் போல..
விடுதலை ஏதேனும் உண்டோ ?
தவம் செய்து வரம்
பெற்று வந்ததோ ??
சிறை பெற்று கிடக்கவே
உன் இதழில்...!!

சீதனம்...

தாய் வீடு சீதனமென்று
நீ எதை கொண்டு வந்தாலும்
தவறாமல் கொண்டுவா
பெண்ணே கர்ப்பென்னும்
சீதனத்தை.....
தப்பி தவறி கூட அதை
சில குள்ள நரிகளிடம்
இழந்து விடாதே..
பலி ஆட்டை போல ...
புகுந்த வீட்டில் நீ
விளகேற்றுபவள் மட்டுமல்ல..
இந்த குடும்பத்தில் உன்
கர்ப்பெனும் அறிய சீதனத்தை
விளக்கில்லா ஒளியில்
கொடுத்து விருத்தி பெரசெய்பவள்...

முடிகிறது இச்சைகள்..



முத்தங்களும் முனகல்களும்
உனதாக ....
கெஞ்சல்களும் கொஞ்சல்களும்
அதனோடு மிஞ்சல்களும்
எனதாக ..
வெட்கங்களும் உணர்வுகளும்
துட்சமாகி போக...
வெளிக்காட்ட பண்டங்கள்
விட்டில்பூச்சி வெளிச்சத்தில்
அழகுற...
இம்சைகளுக்கு இடையில்
காத்துவைத்த பெட்டகத்தை
காமனுக்கு இரையாக்கி ...
கரை சேர முடியா காமத்தில்
நீந்தியே முடிகிறது இச்சைகள்..

பதியாமல் போனது உனது பாதசுவடு



அன்றைய தினம் மட்டும்
அன்பே உன் பாதசுவடுகள்
கடற்கரை மணலில்
பட்டு இருந்தால் வீறு கொண்டு
எழுந்திருக்காது சுனாமி
என்ற பேரலை....
அழகான ஓவியத்தை
அழிப்பதா என
திரும்பி சென்றிருக்கும்..!!

மீண்டும் கிடைக்க பெறா குழந்தை பருவம்


ஈன்றெடுத்த கணம்
முதல் தன் நெருக்கத்தில்
கதகதப்பால்..
பசிதனின் தன்மை அறிந்து
பால் தருவாள்..
விரல் வலிக்காமல்
நகம் கடிப்பாள்..
விரல் பிடித்து நடக்க
கற்றுகொடுப்பாள்..
உரம் விளா ம ல்
தலை சாய்ப்பாள்...
தான் உறக்கத்திலும்
உன்னை நினைப்பாள்..
நிலவுக்கு வெறிக்கை
காட்டி சொரூட்டுவாள்..
தாலாட்டு ஒன்று
அவள் படிப்பாள்..
தாய்மடியே சொர்க் கமென
நான் தூங்க ...!!!

மச்சம்...

என் முத்தத்தின்
நினைவாக
ஒட்டிக்கொண்ட 
கரும்புள்ளி
அவளின் 
உதட்டு  மச்சம் ..!!

அறியா வெட்கங்கள் !!!

சின்னதாய் ஒரு முத்தம்
கேட்டால் ஏதும் கேட்காதவள்
போல் என்ன வேண்டுமென்பாய்...!!

செல்லமாய் நெருங்கையில்
இருக்கின்ற இடைவெளியை
இன்னும் கொஞ்சம்
கூட்டி கொள்கிறாய்... !!

ஹே.....என்னடி என்று
நான் சொல்லும் அந்த
ஒரு வார்த்தையில்
தானடி எனது அதனை
ஏக்கங்களும் மடிந்து
போகின்றன...!!

சீ.... போடா என்று என்று
நீ சொல்லும் அந்த
ஒரு வார்த்தையில்
தானடி உனது அத்தனை
வெட்கங்களும் அடங்கி
கிடக்கின்றன..!!

வேரும் விழுதும் :

அடர்ந்ததொரு காட்டினுள்ளே
அழகாய் கூடு கட்டி
வாழும் உயிர்கள்..!!

அடுத்தாத்து இனமொன்று
புதிதாய் குடி ஏற..!!

சங்கடங்களும் சச்சரவுகளும்
பல சலசலக்க...!!

விட்டுகொடுக்க தெரியா
மூடர்களுக்கிடையே
அன்பெனும் கூடு உடைபெருமோ??

தாங்கி பிடிக்கும் விழுதுக்கோ
மரியாதையை சரிய

வேரோடு சாய்ந்ததாம்
வலுவிழந்த ஆலமரம்..!!

எப்படி முடியும் ??

பூவை விட மேன்மை
ஒன்று உள்ளதோ ??
உந்தன் இமைகளின்
இடுக்கில் மாட்டிகொண்ட...
என் இதயம் ....!!

மழை பெய்தால் மண்
வாசனை அறியாதவன் ...
நீ சாலையில் நடக்கையில்
என்னோ உடன் வந்துவிடுகிறது
உன் வசத்தால் ...!!

என் மனசு ...!!

காற்றிலே கரைந்து
போகும் கற்பூரம் போல ...
மெல்லமாய் உறைந்து போகுதடி....
உன்னை கண்ட இடத்திலே ...

மீண்டும் ஊற்று எடுத்து
ஓடுகிறது நீ திரும்பி
பார்கையில் ..ஏனோ ??

உன்னை சிலையாக
செதுக்க சொன்னால்
கூட செதுக்கி விடுவேன் ..
கவிதையாக வடிக்க
சொன்னால் எப்படி முடியும் ??

ரசித்தேன்....

நானும் கூட ரசித்தேன்
கைரேகை ஜோதிடத்தை
என் வாழ்கை தடத்தில்...
எந்த நிறுத்தத்தில்
என்னவள் ஏறுகிறாள்
என்பதை அறிய
ஆவலுடன் கையை
நீட்டும் போது ..!!!

Caution :





பூக்களெல்லாம்
போர்தொடுக்க
போகுதடி
தன்னை விட
மென்மை
என்றெண்ணி..
தொட்டு
விடாதே 
கண்மணி..!!

போதை..........



பூக்களுக்கும் ஏனடி
போதையை ஏற்றினாய்
இப்பொழுது பார்
தள்ளாடி கொண்டே
இருக்கின்றன..!!
உன் மீது பட்ட
தென்றல் தன்
மீது பட்டதும் !!!

குழப்பம்......






உன் கொலுசுகளை
மட்டும் என்னிடம்
சிணுங்க
வேண்டாமென்று
சொல்லடி..
குழம்பி போகிறேன்
எந்த ராகமென்று
தெரியாமல்..!!

பிம்பம் !!

உன்னை தான் பார்கிறேன்
என தெரிந்தும்...
என்னை நானே கிள்ளி
பார்த்துக்கொண்டேன்...
வழக்கம் போல தோன்றும்
உன் உருவத்தின்...
என் நினைவு பிம்பமோ
என நினைத்து..!!

என்றும்.....

விடியாமல் போன இரவுகள்
விடிந்து போன நாட்கள்
தலை காட்டிய சூரியன்
தவழ்ந்தோடிய நிலவு
மின்மினித்த நட்சத்திரம்
எல்லாவற்றையும் ரசித்து கொண்டிருக்கிறேன்
நீ வரும் வரையில்...
இன்று மட்டும் அல்ல...
.
.
என்றும்...!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive