மழை விடுத்த பின்
லேசான தூரலில்
கைகோர்த்து நடந்த
ஈரமான சாலை
சில்லென்று ஓடும்
சிறிய மனரோடையில்
உன் பாத சுவடுகளில்
என் பாதத்தை மெல்ல
மெல்ல அழியாமல்
பதித்து நடந்த நாட்கள்
தவறென்று தெரிந்தும்
உன் பாதத்தை தொட
முந்தியடித்து என்
கால்கள் நடக்க....
ஊர் வந்து விட்டதென்று
நீ ஒதுங்கி நடக்க...
ஒடுங்கி தான் போகிறது
என் மனம்
நாம் நடந்து வந்த
பாதையை எல்லாம்
பார்த்து கொண்டே..!!!
0 comments:
Post a Comment