நீ மௌனமாய் செல்லும்
ஒவ்வொரு தருணமும்
உன்னை அறியாமல் உனது
இதழ்கள் புன்னகைத்து
விட்டு தான் செல்கின்றன..
நீ சிரிக்காமல் சிதறவிடும்
அந்த சின்ன சிரிப்பில்
என் சின்ன மனசை
ஒரு செல்ல நாய் குட்டி
போல இழுத்து செல்கிறாயே..???
என்னை தொடரும் எனது
நிழல் கூட உந்தன் திசை
நோக்கி பின் தொடர
ஆரம்பித்து விட்டது பெண்ணே..
காரணம் தெரியாமல் குழம்பிபோனேன்
பின்பு தான் உணர்ந்தேன்
நிலவின் பிம்பம் கடல் மேல்
தான் மிக அழகாக பிரகாசிக்குமென்று...!!
0 comments:
Post a Comment