சின்னதாய் ஒரு முத்தம்
கேட்டால் ஏதும் கேட்காதவள்
போல் என்ன வேண்டுமென்பாய்...!!
செல்லமாய் நெருங்கையில்
இருக்கின்ற இடைவெளியை
இன்னும் கொஞ்சம்
கூட்டி கொள்கிறாய்... !!
ஹே.....என்னடி என்று
நான் சொல்லும் அந்த
ஒரு வார்த்தையில்
தானடி எனது அதனை
ஏக்கங்களும் மடிந்து
போகின்றன...!!
சீ.... போடா என்று என்று
நீ சொல்லும் அந்த
ஒரு வார்த்தையில்
தானடி உனது அத்தனை
வெட்கங்களும் அடங்கி
கிடக்கின்றன..!!
0 comments:
Post a Comment