என் மனதின் வார்த்தைகள்...

ம்ம்ம் என்று மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்..!!




விடியலில் கண் விழிக்க
வெண்மதி அவள் நீராடிவிட்டு
தேநீரோடு கையை நீட்டுவாள் ..
சக்கரை இருக்கின்றதா என்றால்
உதட்டை கடித்து விட்டு
ஹ்ம்ம் இருக்கின்றது என்பாள்
என் இனியவள் !!

கதகதப்பில்..!!


இந்த கோடை காலத்திலும்
போர்வையா என்று விலகினால்
திட்டுகிறாள்.. காரணம் கேட்டால்
மாமா நான் எப்போதும் உன்
கதகதப்பிலே இருக்கவேண்டும் என்கிறாள் ..!!



எதிர்மறையோடு நீ
சண்டை போட்டாலும் ..
சண்டை முடிந்த
மூன்றாவது நிமிடத்தில்
ஒரு முத்தத்தோடு
உன் முசுடுகளை வெட்டி எரிந்து
கட்டி அணைத்து முடிப்பாயே ..
ஹ்ம்ம் நீ செல்ல கோபக்காரி தான்..!!


செல்லமாக என் கன்னத்தை
கிள்ளி விளையாடுவாள்
கோபம் வந்தால் காதை திருகுவாள்
இப்படியே இவள் சேட்டைகளெல்லாம் தொடரும் ..



முறையில்லாமல் உந்தன்
நினைவுகள் உரிமையோடு
என்னுடன் சண்டை போடுதடி ..
நான் அவற்றிற்கு விடுதலை
தருவதில்லையாம் !!

உதடு


வெளி வட்டாரத்தில் முத்தம் கேட்டால்
கண்டனம் தெரிவிப்பாள்
செய்கையில் வினவினால்...??
சாயம் பூசாத உதடு
சிவந்து விடுமாம் வெட்கத்தில்...!!

குழந்தையை போல..




சமைத்து முடித்தபின் எனக்காக
சாப்பிடாமல் காத்திருப்பாள்
சரி வா சாப்பிடலாம் என்று
இரண்டு தட்டில் போட்டால்...
சின்ன குழந்தையை போல
அடம்பிடிப்பாள் ஆ என வாயை
திறந்து வைத்துகொண்டு ஊட்ட சொல்லி..!!



பொய் சொன்னால் கோபப்படுவாள்
சிடுமூஞ்சியாய் அமர்ந்திருப்பாள்
கோபமா என்று கட்டிப்பிடித்து
ஒரு முத்தம் தந்தால்....
இன்னொரு பொய்
சொல்லுங்களேன் என்பாள் !!

காத்திருப்பு !!

காதலிப்பது மட்டுமா காதல்
காத்திருப்பதும் தான்
காதல் என்பாயே..
எதுவரை என்று சொல்லாமல்
சென்று விட்டாயே அன்பே ..
என் வாழ்கையின்
இறுதி காலத்திலும்
உனக்காகவே காத்திருக்றேன்..!!


கனவிலெல்லாம் என்னை கண்டபடி
ஏதேதோ செய்கிறாய் கண்மணி ..
என்னை காணும் போது மட்டும்
ஏன் இப்படி நகத்தை கடித்தபடி
தரையை பார்த்து நிற்கிறாய் ??


வெளியே சிரித்துக்கொண்டு..உள்ளேஅழுவதற்கு நான்
ஒன்றும் நடிகன் அல்ல அன்பே.. உன் காதலன்..

எப்போதும் சிரிப்போடு மலரும் இதழ்கள்..
இன்று வெறுப்போடு அழுது கொண்டு இருக்கின்றதடி..

உன்னை பிரிந்து வாடும் இந்த நொடிகள்..
ஏக்கமெனும் கடிகாரத்தில்உறங்காமல்
ஏனோ என்னையே சுற்றிவருகிறது..!!
 

தரிசனம் !!


சூரியனை எதிர் பார்த்து
கண்விழித்த எனக்கு..
ஒரு அழகிய நிலவின் தரிசனம்
அதிகாலையில் வாசலில் அவள் 
கோலமிட்டபடி என் முன்னே..!!

பிரிவின் கொடுமை..!!

சூரியனை  கண்டால்  விடியும்  இரவு ..
உன்  முகம்  கண்டால்  மட்டுமே
முழிக்கும்  என்  கண்கள
உன்  வழித்தடம்  பார்த்தே
என்  விழி  அலையுதடி
உன்  கோலத்தில்  சிக்கி  தவிக்கும்
புள்ளிகளை  போல  சிக்கி
கொண்டதடி  என்  மனசும்
எதையோ  இசைத்த  படி
உன்  கால்  கொலுசு..
 பட  படவென  எதையோ
படிக்கின்றது உன்  கண்கள்..
படிப்பறிவில்லாத  நான்
ஆனேன்  வாசகனாய்
உன்  கண்ணின்  மொழிக்கு..
என்னை  தவிர்த்து  செல்லும்
உன்  விழிகளிடம்  கேளடி..
உன்  வழியே  நான்  வந்த  பின்னணியை..
பிரியமனமில்லாமல்  துடிக்கும்
உன்  இமைகள்  சொல்லுமடி
பிரிவின்  கொடுமையை..
வழிந்தோடும்  என்  விழிநீர்
சொல்லுமடி  உன்  பிரிவின்  வலியை..!!

blog counter

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

My Favourites


About Me

My Photo
Sathish...Ur Sweetness is My Weakness..!!
Hi Dudes, Well Juz a short intro abut me.. Believe life is gift…So, I’m trying to make it best!! I, m down to earth for those who loves me and peak to sky for those hates me :P LOL :D jus kidding.. enthusiast-er for my friends, giving hope to life for those who is thinking life is nothing, apart from that simply telling from bottom of ma heart i don't know much about myself.. ;) It is better to understand me urself by being with me (vanga pazhagalam ) rather i would say about me myself..that's not gud na? So Let start adding me as ur friend and ping at ur free time…!!
View my complete profile
Powered by Blogger.

Followers

Blog Archive