அழகாய் அவள் அடம்பிடிப்பாள்
அடி நெஞ்சில் என்னை நினைத்து..
அவள் படும் வெட்கங்கள்...
விழி அசைவில் மனம் மயக்கி
தலை கவிழ்ந்து கிடக்கையில்...
என் விரல் பிடித்து சொடுக்கு எடுப்பாள் ..
நுனி நாக்கில் கோலமிட்டு
இதழ் முத்தம் தெரிப்பாள் ...
சிறு தீண்டலில் சொக்கி கிடக்க..
சிவப்பணுக்கள் ஸ்தம்பித்து போகுதே...
அவள் மூச்சு காற்று உஷ்ணத்தில்
என் மோக தீ பரவுதே...
வியர்வை மழை பொழிகையில்
உடல் மெல்ல மெல்ல நனையுதே...
கட்டி வச்ச காலங்கள்
அதில் பஸ்பமாகி போகுதே...
சாமத்து கால பூஜையில்
சமுத்திரமொன்று உடைகையில்..
அது சொர்க்கத்தில் எனை நிறுத்தி
உயிர் சுகமொன்று காணுதே..!!