சூரியனை கண்டால் விடியும் இரவு ..
உன் முகம் கண்டால் மட்டுமே
முழிக்கும் என் கண்கள
உன் வழித்தடம் பார்த்தே
என் விழி அலையுதடி
உன் கோலத்தில் சிக்கி தவிக்கும்
புள்ளிகளை போல சிக்கி
கொண்டதடி என் மனசும்
எதையோ இசைத்த படி
உன் கால் கொலுசு..
பட படவென எதையோ
படிக்கின்றது உன் கண்கள்..
படிப்பறிவில்லாத நான்
ஆனேன் வாசகனாய்
உன் கண்ணின் மொழிக்கு..
என்னை தவிர்த்து செல்லும்
உன் விழிகளிடம் கேளடி..
உன் வழியே நான் வந்த பின்னணியை..
பிரியமனமில்லாமல் துடிக்கும்
உன் இமைகள் சொல்லுமடி
பிரிவின் கொடுமையை..
வழிந்தோடும் என் விழிநீர்
சொல்லுமடி உன் பிரிவின் வலியை..!!
உன் முகம் கண்டால் மட்டுமே
முழிக்கும் என் கண்கள
உன் வழித்தடம் பார்த்தே
என் விழி அலையுதடி
உன் கோலத்தில் சிக்கி தவிக்கும்
புள்ளிகளை போல சிக்கி
கொண்டதடி என் மனசும்
எதையோ இசைத்த படி
உன் கால் கொலுசு..
பட படவென எதையோ
படிக்கின்றது உன் கண்கள்..
படிப்பறிவில்லாத நான்
ஆனேன் வாசகனாய்
உன் கண்ணின் மொழிக்கு..
என்னை தவிர்த்து செல்லும்
உன் விழிகளிடம் கேளடி..
உன் வழியே நான் வந்த பின்னணியை..
பிரியமனமில்லாமல் துடிக்கும்
உன் இமைகள் சொல்லுமடி
பிரிவின் கொடுமையை..
வழிந்தோடும் என் விழிநீர்
சொல்லுமடி உன் பிரிவின் வலியை..!!
1 comments:
படிப்பறிவில்லாத நான்
ஆனேன் வாசகனாய்
உன் கண்ணின் மொழிக்கு..
Vetha.Elangathilakam
Denmark
Post a Comment