உன்னை தேடியே என் பயணம்
நீண்ட காலமாய் நீளும் தூரமாய்
நீண்டு கொண்டு போனதே ..
இந்த சின்ன வாழ்கையில் ..
விடியலாய் அமைந்தது
என்னிரவுகளுக்கு உன் வரவு ..!!
உனக்குள் இருந்த பயமும்
மாண்டுபோனதோ ?
விம்பியழும் சின்ன குழந்தை
போல வெட்கத்தில்
தலை சாய்த்தவளாய் ..!!
தாங்கி கொள்ள தோள்
கிடைத்ததும் தன் பாரத்தை
எல்லாம் இறக்கிகொண்டிருந்தாள் ..
இரு துருவ காந்தங்களை போல
ஒட்டாமல் அசை போட்டது
எங்கள் உதடுகளும் .!
அவளின் துப்பட்டாவோடு ஒட்டி
உரசி உறவாடி கொண்டிருந்தது
என் சட்டையும் பதிலுக்கு ..!!
தூண்டிலில் விழும் மீன் போல
அவளின் கன்னக்குழியில்
சற்றே பாராமல் விழுந்தேன்
தத்தளித்தேன் ஆனந்தத்தில் மீளமுடியாமல்…
தயக்கத்தோடு முதல் முதலாக
பற்றினால் என் விரல்களை ..
அப்பா எத்தனை இருக்கம் ..
அவளின் விரல் பினைப்பினில்
எனது விரல்கள் ..
என் ஒவ்வொரு விரல்களுக்கும்
ஒரு காதலியாக அவள்
பிஞ்சு விரல்கள் ..
கொஞ்ச நேரம் கொஞ்சி
குலாவிய பின்......
என் ஒவ்வொரு விரல்களின் செல்ல
என் ஒவ்வொரு விரல்களின் செல்ல
காதலிக்கு டாட்டா காட்டி ..
அவளின் கைரேகையை நகல்
எடுத்தவனாய் நகர்ந்தேன் ..!!
0 comments:
Post a Comment