அவளை பற்றி
வார்த்தைகளால்
வழிமொழிவதெல்லாம்
பொய் மொழியே..
ஏனென்றால் கற்பனைக்கு
எட்டாத கவிதை அவள்..
கவிஞர்களால் வடிக்க
முடியாத கவிதை அவள் ...!!
சிற்ப்பிகள் செதுக்கிடாத
சிலை அவள்..
ஓவியன் வரைந்திடாத
ஓவியம் அவள்..
கடலினில் முளைக்காத
முத்து அவள் ..
பூமிக்கு தந்து விட்ட தேவதை...
என் சொத்து அவள் !!
0 comments:
Post a Comment